ஆதார் இருந்தா தான் விவசாயிகளுக்கு ரூ.6,000 தருவோம்.. செக் வைத்த மத்திய அரசு
Recommended Video

டெல்லி:மத்திய அரசு அறிவித்துள்ள 6 ஆயிரம் உதவித் தொகை பெறும் விவசாயிகளுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 3 தவணைகளாக அந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், அடுத்த மாதத்துக்குள் விவசாயிகளுக்கு முதல் தவணையை செலுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. திட்டத்துக்கு தகுதியான விவசாயிகளின் தகவல்கள் அனைத்து மாநிலங்களின் உதவியுடன் நாடு முழுவதும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
அதற்காக, மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் மாநிலங்கள் அனைத்துக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது: விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு திட்டத்தின் கீழ், கடந்த டிசம்பர் மாதம் முதல் வரும் மார்ச் மாதம் வரையுள்ள 4 மாத காலத்துக்கான உதவித்தொகை வரும் மார்ச் மாதத்துக்குள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இத்திட்டத்தில் போலியான நபர்கள் பயனடைவதைத் தடுக்கும் நோக்கில், தகுதியான விவசாயிகளிடமிருந்து தகவல்களை பெறும் போது, அவர்களின் ஆதார் எண்ணையும் பெற வேண்டும். முதல் தவணைத்தொகையைப் பெற ஆதார் எண் கட்டாயமில்லை.
ஆனால், 2வது தவணை பெற ஆதார் எண் கட்டாயம். அந்த ஆதார் எண் அளித்த விவசாயிகளுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படும். எனவே, அனைத்து விவசாயிகளிடமிருந்தும் ஆதார் எண் பெறப்படுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.
திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற சில தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். கணவன், மனைவி, 18 வயதுக்குள்ளான குழந்தைகள் உள்ள ஒரு குடும்பம், மாநில நிலஅளவைப் பதிவுகளின்படி பிப்ரவரி 1, 2019 அன்று 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்க வேண்டும்.
எனவே, திட்டத்துக்கு தகுதியான விவசாயிகளிடமிருந்து பெயர், ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு எண், செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களை மாநிலங்கள் சேகரிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications