நாடு முழுவதும்... நாளை முதல் தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி... மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: நாடு முழுவதும் நாளை முதல் தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்து மதத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். அங்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.
திரையரங்கு கட்டணம் பெற டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துளளது.

கொரோனாவால் மூடப்பட்டன
கொரோனா காரணமாக நாடு முழுவதும் தியேட்டர்கள் பல மாதம் மூடி கிடந்தது. இதனால் பல திரைப்படங்கள் ஒ.டி.டி.யில் வெளியானது. இதனை தொடர்ந்து 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டது.இதற்கிடையே பொங்கலையொட்டி தமிழகத்தில் சினிமா தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

தமிழக அரசு செய்த செயல்
இதற்கு மருத்துவ நிபுணர்கள், பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசும் இதற்கு கடும் கண்டனம் கூறியது. இதனை தொடர்ந்து 100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதி என்ற முடிவை தமிழக அரசு திரும்ப பெற்றது. இந்த நிலையில் நாடு முழுவதும் தியேட்டர்களில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது

மத்திய அரசு அனுமதி
100% பார்வையாளர்களை அனுமதிக்கும்போது தியேட்டர்களில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு:-நாடு முழுவதும் நாளை முதல் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தியேட்டர்களுக்கு வரும் பார்வையாளர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை வேண்டும்
அங்கு வரும் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும். திரைப்பட இடைவேளைகளின்போது கூட்டமாக எழுந்து செல்லக்கூடாது என்தற்கான வழிமுறைகளை தியேட்டர்கள் பின்பற்ற வேண்டும். திரையரங்கு கட்டணம் பெற டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications