5 டிரில்லியன் மதிப்புக்கு இந்திய பொருளாதாரம் உயரப்போகிறது.. பொருளாதார ஆய்வறிக்கையால் மோடி மகிழ்ச்சி
டெல்லி: 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு பொருளாதாரத்தை அதிகரிக்க பொருளாதார ஆய்வறிக்கை வழிகாட்டியுள்ளது என்று பாராட்டியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
நாளை பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார அறிக்கையை ராஜ்யசபாவில் தாக்கல் செய்தார்.

மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் 6.8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2020ம் நிதியாண்டில் 7 சதவீதமாக உயரக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
"பொருளாதாரம் தொடர்ந்து நிலைத்திருப்பதால் 2019-20 ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
The #EconomicSurvey2019 outlines a vision to achieve a Trillion economy.
— Narendra Modi (@narendramodi) July 4, 2019
It also depicts the gains from advancement in the social sector, adoption of technology and energy security.
Do read!https://t.co/CZHNOcO7GV
ஆனால் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதத்தை 8 சதவீதமாகத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
"நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை பொருளாதாரத்தின் தடை சக்திகளை உடைத்து தள்ள வேண்டும், அதே நேரத்தில் அதிக திறன் பயன்பாடு மற்றும் வணிக எதிர்பார்ப்புகளின் உயர்வு ஆகியவை 2019-20 ஆம் ஆண்டில் முதலீட்டு நடவடிக்கைகளை அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருளாதார ஆய்வறிக்கையை, பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
அவர் கூறுகையில், பொருளாதார ஆய்வறிக்கை, 5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைவதற்கான ஒரு பார்வையை கோடிட்டுக் காட்டுகிறது. இது சமூகத் துறையின் முன்னேற்றம், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது மற்றும் எரிசக்தி பாதுகாப்பிலிருந்து பெறப்பட்ட லாபங்களை சித்தரிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!












Click it and Unblock the Notifications