ஜேஎன்யூ தாக்குதலில் திருப்பம்.. முகமூடி அணிந்த பெண்ணை அடையாளம் கண்ட போலீஸ்.. ஒப்புக்கொண்ட ஏபிவிபி!
ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது சிவப்பு சட்டை அணிந்து கொண்டு மாணவர்களை தாக்கிய பெண் யார் என்று போலீஸ் கண்டுபிடித்துள்ளது.
டெல்லி: ஜேஎன்யூவில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது சிவப்பு சட்டை அணிந்து கொண்டு மாணவர்களை தாக்கிய பெண் யார் என்று போலீஸ் கண்டுபிடித்துள்ளது. இவர் பெயர் கோமல் சர்மா என்றும், இவர் ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினார்கள். நூற்றுக்கு மேற்பட்ட முகமூடி அணிந்த கும்பல் இன்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் புகுந்து இந்த கொடூரத்தையே நிகழ்த்தினார்கள்.
ஜேஎன்யூவில் மாணவர்களை தாக்கியது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர்கள் என்பது தொடர்பான வீடியோ ஆதாரங்கள்வெளியானது. இதில் மாணவர்கள், மாணவிகள் மற்றும் ஆசிரியர்களையும் சரமாரியாக தாக்கப்பட்டனர்.
|
என்ன யார்
ஜேஎன்யூவில் இடதுசாரி மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தற்போது இணையத்தில் முக்கிய ஆதாரங்கள் வெளியானது. இதில் ஜேஎன்யூவில் சில மாணவிகளும் உள்ளே புகுந்து மாணவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். அதிலும் சிவப்பு சட்டை போட்ட இந்த பெண் , கையில் கத்தி வைத்துக்கொண்டு சக மாணவர்களை மிரட்டி உள்ளார்.

என்ன அடையலாம்
இந்த நிலையில் இவரின் அடையாளத்தை டெல்லி போலீஸ் கண்டிபிடித்துள்ளது . இந்த சிவப்பு சட்டை அணிந்த பெண் கோமல் சர்மா. இவர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியை சேர்ந்தவர் என்ற உண்மை வெளியாகி உள்ளது. இவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் டாவ்லாட் ராம் கல்லூரியை சேர்ந்தவர்.

தலைமறைவு
இந்த நிலையில் தற்போது கோமல் சர்மா தலைமறைவாகி உள்ளார். இவரை போலீஸ் மூன்று முறை அழைத்தும் கூட, இன்னும் போலீசிடம் ஆஜராகவில்லை. இவரின் அடையாளத்தை தற்போது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபி உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக ஏபிவிபி டெல்லி செயலாளர் சித்தார்த் யாதவ் பேட்டி அளித்துள்ளார்.

என்ன பேட்டி
சித்தார்த் யாதவ் தனது பேட்டியில், கோமல் சர்மா எங்கள் அமைப்பை சேர்ந்தவர்தான். அவரை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரை சமூக வலைத்தளங்களில் கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள். அவர் தன்னுடைய குடும்பத்துடன் இருக்கிறார் என்பது மட்டும்தான் எங்களுக்கு தெரியும்.

முடியவில்லை
ஆனால் அதற்கு பின் அவரை எங்களால் தொடர்ப்பு கொள்ள முடியவில்லை. இதை தொடர்ந்து விசாரிக்க வேண்டும். அவருக்கு எதிரான சாதியை முறியடிக்க வேண்டும். எங்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்களும் இதில் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர். எங்கள் அமைப்பும் இது தொடர்பாக உள் விசாரணை நடத்தி வருகிறது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications