ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி பேச்சு
டெல்லி: டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையில் 5-வது நிதி ஆயோக் கூட்டம் துவங்கியது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் பங்கேற்க ஏற்கனவே அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
நிதி ஆயோக் கூட்டத்தை துவக்கி வைத்து பேசிய பிரதமர் மோடி ஏழ்மை, வேலைவாய்ப்பின்மையை எதிர்த்து போராட வேண்டிய நேரமிது. ஏற்றுமதியால் மட்டுமே வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க முடியும். எனவே ஏற்றுமதியை ஊக்குவிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
வரும் 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் வளர்ச்சியை 5 டிரில்லியன் டாலர் அளவிற்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கு சவாலானது தான். ஆனால் மத்திய அரசுக்கு, மாநில அரசுகள் உறுதுணையாக இருந்து ஒத்துழைத்தால் இந்த இலக்கை நிச்சயம் அடைந்து விடலாம்.
தண்ணீருக்காக ஒருங்கிணைந்த அணுகுமுறையை உருவாக்கவே ஜலசக்தி அமைச்சகம் உருவாக்கப்பட்டது என்றார். 2022-ல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் குறித்த நேரத்தில் விவசாயிகளை சென்றுசேர வேண்டும்.
விவசாயிகளுக்கான மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தினால், இரட்டிப்பு வருமானம் பெறலாம். மேலும் விவசாயிகள் தோட்டகலைத்துறை மற்றும் கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
மக்களுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதே முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். 2025-க்குள் நாட்டில் காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பேசினார்
-
உலகத்தின் பார்வையில் மதுரை.. பல வருட கனவு சார், பிரதமர் மோடியின் ஒற்றை அறிவிப்பால் இனி என்ன நடக்கும் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
வளைகுடா நாடுகளில் வாடி வதங்கும் தமிழர்கள்.. உடனடியாக மீட்க பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் -
இந்திய அணுமின் கழகத்தில் வேலை.. ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. எக்ஸாம் கிடையாது! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி












Click it and Unblock the Notifications