Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கனமழையால் திணறும் திருப்பதி.. கர்நாடகாவில் 4 நாட்களுக்கு மழை.. ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்

கர்நாடகாவில் அடுத்த 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடுத்த 4 நாட்களுக்கு கர்நாடகாவில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெங்களூரு மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், சில கடலோர மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவின் வடக்கு உள்பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Tamilnadu-வில் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

    வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது.... இதன்காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    அதேபோல, வடகிழக்கு பருவமழையால், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், புதுச்சேரி மாநிலங்கள் அதிக பயன்பெறும் மாநிலங்களாகும்.. தமிழகத்தை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை தற்போதைய நிலையில் அளவைவிட அதிகமாக பெய்து வருகிறது.

    ஆந்திரா

    ஆந்திரா

    ஆந்திர மாநிலம் திருப்பதியில் கனமழை பெய்து வருகிறது.. இதனால் கடந்த 2 தினங்களாகவே எங்கு பார்த்தாலும் வெள்ள காடாய் காட்சியளிக்கிறது... இதனால், தேவையான நடவடிக்கையை எடுக்கும்படி அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.. இந்நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், திருப்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால், ஏழுமலையான் கோயில் மலையின் நடைப்பாதையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    திருப்பதி

    திருப்பதி

    மேலும் மலைப்பாதையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது... இதனால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.. திருப்பதி நகர் முழுவதும் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது... இதில், வாகனங்களும் அடித்து செல்லப்பட்டன. திருமலையில் ஏழு மலையான் கோயிலை சுற்றிலும் வெள்ள நீர் தேங்கியது. பக்தர்கள் தங்கும் அறைகளை விட்டு வெளியே வர முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மழை நீர் வெள்ளம் போல் பாய்ந்து செல்வதால், வாகனங்களும் மெதுவாகவே நகர்ந்து சென்றன. திருமலையில் பாப விநாசம் செல்லும் சாலை மூடப்பட்டது.

    கர்நாடகா

    கர்நாடகா

    அதேபோல, கர்நாடகாவிலும் கனமழை பெய்தது... தொடர்ந்து கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், ஒன்றாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு அங்கு ஏற்கனவே விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 4 நாட்களுக்கு கர்நாடகாவில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெங்களூருவின் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், சில கடலோர மாவட்டங்கள் மற்றும் கர்நாடகாவின் வடக்கு உள்பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    மழை

    மழை

    வங்க கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களில் அதிகனமழையை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், பெரிய அளவுக்கு மழை இல்லாமல், குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லாமல் கரையை கடந்துவிட்டது. எனினும், வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளதாலும், ஈரமான வடகிழக்கு காற்று தமிழக கடற்கரையோரம் நிலவுவதாலும், அதிக அளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன்காரணமாக ஆந்திரா, மற்றும் புதுவையில் மட்டும் அதிக மழை பெய்துள்ளது என்றாலும், ஆந்திர மாநிலத்தில் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+