ஸ்டெர்லைட் வழக்கு ஒத்திவைப்பு.. திங்கள் கிழமை மீண்டும் விசாரணை
ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.
Recommended Video

டெல்லி: ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. அதே நேரம், ஸ்டெர்லைட் ஆலையால் தொடர்ச்சியாக சுற்றுச்சூழல் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும் தமிழக அரசு கூறியது.

மேலும் ஆலையை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட மூவர் குழு தனது அதிகார வரம்பை மீறி செயல்பட்டு இருப்பதாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இந்தநிலையில், நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தாக்கல் செய்த மனுவையும் சேர்த்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல், விசாரணையை திங்கள் கிழமைக்கு ஒத்தி வைத்தார்.
முன்னதாக, நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான மூவர் குழுவினர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு முகாந்திரம் ஏதும் இல்லை என்று கடந்த மாதம் 26-ந்தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
மேலும், ஆலை நிர்வாகத்துக்கு உரிய நோட்டீஸ் அளிக்காமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். இதற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications