Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே வார்த்தையில் பீட்டாவை வாயடைக்க வைத்த நீதிபதிகள்.. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மனிதர்கள் காயப்படுகிறார்கள் உயிரிழக்கிறார்கள் எனவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா கோரிய நிலையில், இதே காரணத்தை சொல்லி குத்துச்சண்டை போட்டிகளுக்கும் தடை கேட்பீர்களா? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக கோரி, 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது. மக்கள் தன்னெழுச்சியாக போராடினார்கள். சென்னை மெரினாவில் லட்சக்கணக்கான மக்கள் கூடி போராடினார்கள். மெரினாவில் கடல் பெரிதா, மக்கள் கூட்டம் பெரிதா என்றால், மக்கள் கூட்டமே பெரிது என்கிற அளவில் இருந்தது.

 The Supreme Court silenced PETA on a single question in the Jallikattu case?

அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக, எதிர்க்கட்சியாக இருந்த திமுக என எல்லா கட்சிகளுமே ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டத்தை ஆதரித்தன. எல்லா கட்சிகளுமே போராட்டத்தை ஆதரித்தன. நடிகர் விஜய் முதல், கமல் வரை பல நடிகர் நடிகைகள் போராட்டத்திற்கு ஆதரவு தந்தனர். நேரிலேயே பலரும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடி உத்தரவு: இதையடுத்து நிலைமை விபரீதமாக போவதை உணர்ந்த பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அறிவுறுத்தினார்.இதன்படி இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காக சிறப்பு சட்டசபை கூட்டமெல்லாம் நடந்தது. இறுதியாக சட்டம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. அதற்கு குடியரசு தலைவரும் தமிழக ஒப்புதல் அளித்தார். சட்டமும் அமலுக்கு வந்தது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. ஆனால் ஜல்லிக்கட்டு போட்டிகள் மீண்டும்நடக்க தொடங்கிய பின்னர், பீட்டா அமைப்பு பல்வேறு விஷயங்களை சேகரித்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

தீர்ப்பு விவரம்: பல்வேறு கட்ட விவாதங்களுக்கு பின்னர், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற அரசியல சாசன அமர்வு, ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை என்று கூறியுள்ளது. ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் செல்லுபடி ஆகும் என தீர்ப்பு அளித்துள்ள உச்ச நீதிமன்றம், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாச்சாரங்களில் ஒரு பகுதி என தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு சட்ட திருத்தம் எந்த விதிமுறைகளையும் மீறும் வகையில் இல்லை என்றும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசியல் சாசன பிரிவு 14 மற்றும் 21 ஆகிய அடிப்படை உரிமைகளை பாதிக்கும் வகையில் இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இதனிடையே வழக்கின் போது விலங்குகள் கேளிக்கை பொருள் அல்ல. அவற்றை வைத்து காட்சிப்படுத்தி துன்புறுத்த கூடாது: பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வைத்த வாதம் வைத்தது. அதற்கு நீதிபதிகள். குதிரை பந்தையம் நடக்கிறது, நாய்களுக்கான பேசன் ஷோ நடக்கிறது. அது எல்லாம் என்ன? என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதேபோல் மனிதர்கள் காயப்படுகிறார்கள் உயிரிழக்கிறார்கள் எனவே ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா தனது வாதத்தில் குறிப்பிட்டிருந்தது. இதே காரணத்தை சொல்லி குத்துச்சண்டை போட்டிகளுக்கும் தடை கேட்பீர்களா? நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் ஜல்லிக்கட்டை அனுமதிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்ட திருத்தத்தை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம் பிற மாநிலங்களும் தங்களது கலாச்சாரத்தை காக்க இத்தகைய வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் தங்கள்து தீர்ப்பில் குறிப்பிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+