ஞானவாபி மசூதியில் லிங்கம்? அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ளன ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் போன்ற வடிவம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது எத்தனை ஆண்டுகள் பழமையானது என்பது குறித்து தெரிந்துகொள்ள கார்பன் டேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் வழக்கு தொடுத்திருந்தனர். இந்நிலையில் இது குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
வாரணாசியில் சுமார் 325 ஆண்டுகளுக்கு முன்னர் முகலாய பேரரசர் அவுரங்கசீப் ஆணையின்படி இந்த மசூதி கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இந்த மசூதி குறித்து சில சர்ச்சைகள் நிலவி வந்தன. அதாவது, இது பழைய காசி விஸ்வநாதர் கோயிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்பினர் குற்றம்சாட்டினர். இதனையடுத்து இந்த மசூதியில் நடத்திய ஆய்வில் லிங்கம் போன்ற வடிவம் ஒன்று கிடைத்துள்ளது. இதனையடுத்து, இந்த மசூதி இந்து கோயிலை இடித்துவிட்டுதான் கட்டப்பட்டது என இந்துத்துவ அமைப்பினர் பிரசாரம் நடத்த தொடங்கினர்.

ஆனால், மசூதிக்கு உள்ளே வருவதற்கு முன்னர் கை, கால்களை கழுவ ஒரு நீரூற்று இருந்தது என்றும், அதைத்தான் இவர்கள் லிங்கம் போன்ற வடிவம் என்று கூறிகிறார்கள் என மசூதி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஆனால் இந்துத்துவ அமைப்பினர் இதனை ஏற்கவில்லை. எனவே மாவட்ட நீதிமன்றத்தை அணுகி இந்த லிங்கம் வடிவத்தின் வயதை கண்டறிய கார்பன் டேட்டிங் செய்ய வேண்டும் என்று இந்துத்துவ ஆதரவாளர்கள் வலியுறுத்தினர். ஆனால் நீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்காமல் மனுவை தள்ளுபடி செய்தது.
பின்னர் அவர்கள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி அரவிந்த் குமார், இந்த லிங்க வடிவத்தின் உண்மையான வயதை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என்றும், அதுவரை இந்த வடிவம் சேதமடையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.
விசாரணையில், ஞானவாபி மசூதி வளாகத்தில் உள்ள சிவலிங்கம் அல்லது நீரூற்று போன்ற வடிவத்தை அறிவியல் தடையவியல் பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதித்த அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்தது நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா மற்றும் புதியதாக நீதிபதியாக பதியேற்ற கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications