நச் பதிலடி கொடுத்த கனிமொழி! ஓம் பிர்லாவின் முகம் மாறிடுச்சே! லோக்சபாவில் சம்பவம்
டெல்லி: லோக்சபாவில், திமுக எம்பி கனிமொழியின் பேச்சு பெரும் கவனம் பெற்றிருக்கிறது. திமுகவின் கருப்புக்கொடி போராட்டம் குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேசிய விஷயத்திற்கு கனிமொழி பதிலடி கொடுத்திருக்கிறார்.
லோக்சபாவில் நேற்றைய தினம், திமுக எம்பி டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தியிருக்கிறார் என்று சொன்னபோது, கருப்புக்கொடி ஏற்றினால் என்ன? ஏற்றாவிட்டால் என்ன? என்று நக்கலாக சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி கேட்டிருந்தார். இந்நிலையில் கனிமொழி எம்பி இன்று பதில் கொடுத்திருந்தார்.

டி.ஆர்.பாலு நேற்று பேசும் பொழுது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்தார் என பதிவு செய்தார். அப்போது உடனே குறுக்கிட்ட சபாநாயகர், கருப்புக்கொடி ஏற்றினால் என்ன? நீலக் கொடி ஏற்றினால் என்ன? என நக்கலாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இன்று கனிமொழி, தனது உரையில் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். "கருப்புக்கொடி என்பது போராட்டத்தின் அடையாளம். கருப்பு என்பது நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போராடி வெற்றி பெறுவோம் என்பதை உரக்க சொல்வதற்கான குறியீடு.
நீலக்கொடி என்பது அம்பேத்கர் அவர்களின் குறியீடு. ஆனால், அதே நீல நிறத்தைதான் நீங்கள் நேற்று கேவலப்படுத்தினீர்கள். அதே அம்பேத்கர்தான் எங்களுக்கு கற்பி, ஒன்றுசேர், போராடு என சொல்லிக் கொடுத்தவர்" என்று பதிலடி கொடுத்தார். கனிமொழி பேச்சால், சபாநாயகரின் முகம் மாறிவிட்டது.












Click it and Unblock the Notifications