டிச.1 முதல் இதெல்லாம் மாறி விட்டது மக்களே.. மறக்காமல் நினைவில் வச்சுக்கங்க...!
இன்றுமுதல் 5 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன
டெல்லி: டிசம்பர் 1ம் தேதி முதல் இதெல்லாம் மாறி விட்டது மக்களே.. மறக்காமல் நினைவில் வைத்து கொள்ள வேண்டியது நமக்கு அவசியம்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பரம் மாதம் பல மாற்றங்களைமக்கள் கண்டு வருகிறார்கள். அந்த அடிப்படையில் டிசம்பர் 1ம் தேதியான இன்று முதல் ஐந்து முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
நிறையப் பேருக்கு இது குறித்துத் தெரியுமோ என்னவோ. அதனால்தான் நாங்கள் அந்த ஐந்து மாற்றங்களையும் தொகுத்துக் கொடுக்கிறோம். நோட் பண்ணி வச்சுக்கங்க மறக்காம.

ஆர்டிஜிஎஸ் இனி 24 மணி நேரம்
வங்கிகளில் ஆன்லைன் மூலமாக நாம் தற்போது NEFT, IMPS, RTGS ஆகிய முறைகளில் ஒருவருக்கு பணம் செலுத்தவும், வாங்கவும் பயன்படுத்துகிறோம். இதில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நெப்ட் மற்றும் இம்ப்ஸ் ஆகியவற்றை 24 மணிநேரமும் பயன்படுத்த அனுமதித்தனர். இன்று முதல் ஆர்டிஜிஎஸ் சேவையையும் 24 மணி நேரமாக்கியுள்ளனர். இது ஆன்லைன் பணப் பரிவர்த்தனையி்ல ஈடுபடுவோருக்கு பெரும் உபயோகமாக இருக்கும்.

காஸ் விலை
வீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர்களின் விலை ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் மாற்றியமைக்கப்படும். அந்த வகையில் இன்றும் விலை நிர்யணம் செய்யப்படும். விலை உயரலாம் அல்லது குறைக்கப்படலாம். அதை வாடிக்கையாளர்கள் இன்று எதிர்பார்க்கலாம்.

ப்ரீமியத்தைக் குறைக்கலாமே
இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருப்போர் அதற்கான பிரீமியம் தொகையை இன்று முதல் பாதியாக குறைத்துக் கட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஒருவர் தனது பிரீமியத்தை அப்டியே முழுமையாகவும் கட்டலாம், விரும்பினால் பாதியாக குறைத்தும் கூட கட்டலாம்.

புது ரயில்கள்
டிசம்பர் 1ம் தேதி முதல் புதிய ரயில்கள் பல அறிமுகப்படுத்தப்படுகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதை விரைவில் சீரமைக்க ரயில்வே துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சிறப்பு ரயில்களை அதிகரித்துள்ளனர். டிசம்பர் 1ம் தேதி முதல் புதிய ரயில்கள் சில ஓடத் தொடங்கும்.

தவணை கட்டாவிட்டால் கட் ஆகாது
தற்போது கொரோணா காலம் என்பதால் பலரும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இதனால் இன்சூரன்ஸ் உள்ளிட்ட பலவற்றைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாடும் கூட பொருளாதார ரீதியாக பல சிரமங்களைச் சந்தித்து வருகிறது. பலர் வாங்கிய கடன்களைக் கூட கட்ட முடியாமல் தவிக்கின்றனர். இந்த நிலையில் இன்சூரன்ஸ் பாலிசிக்கான தவணையைக் கட்ட முடியாவிட்டால் பாலிசி ரத்தாகாது என்ற புதிய உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதற்கு மாறாக பாலிசி பிரீமியத்தில் பாதியைக் குறைத்துக் கட்டலாம் என்ற சலுகை அமல்படுத்தப்பட்டுள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications