டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசியல் சாசனத்தின் அழிவு.. ஆளுநர் செய்தது "பிழை".. பேரறிவாளன் வழக்கில் தமிழ்நாடு அரசு சுளீர் வாதம்

Google Oneindia Tamil News

டெல்லி: பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் அவர்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையை அழித்துவிட்டனர். கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இன்று பேரறிவாளன் விடுதலை வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து, தனக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில்தான் பேரறிவாளனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கி உள்ளனர்.

ராஜீவ் கொலை வழக்கு:30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்வதே தீர்வு-உச்சநீதிமன்றம் ராஜீவ் கொலை வழக்கு:30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்வதே தீர்வு-உச்சநீதிமன்றம்

கடந்த முறை

கடந்த முறை

கடந்த முறை இந்த வழக்கில், பேரறிவாளனை விடுதலை செய்ய மாநில அரசு எடுத்த முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டார் என்று மத்திய அரசு கூறியது. இதையடுத்து அது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கோரிக்கை விடுத்தது.

பேரறிவாளன்

பேரறிவாளன்

இதையடுத்து இன்று நடந்த வாதத்தில், மத்திய அரசு சார்பாக இணை சொலிஸ்டர் ஜெனரல் நடராஜன் ஆஜர் ஆனார். அவர் தனது வாதத்தில், இந்த வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்த வழக்கு. இதன் காரணமாக அதில் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கவே அதிகாரம் உள்ளது. மாநில அரசோ, ஆளுநரோ அதில் முடிவு எடுக்கும் அதிகாரம் இல்லை. இது மாநில அரசின் வரம்பிற்கு கீழே வராது, மாநில அரசின் விசாரணை ஆணையம் விசாரித்த வழக்கு என்றால் மட்டுமே அதில் மாநில அரசு முடிவு எடுக்க முடியும் என்று மத்திய அரசு வாதம் வைத்தது,

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

இதையடுத்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அப்படி என்றால் கொலை வழக்கில் ஆளுநர் முடிவு எடுக்க அதிகாரமே இல்லை என்று கூறுகிறீர்களா? 161 CrPC. சட்ட பிரிவு படி ஆளுநர் இதுவரை பலரை விடுதலை செய்து இருக்கிறாரே. அது எல்லாம் தவறு என்று சொல்கிறீர்களா? பேரறிவாளன் வழக்கில் 2/ 3 ஆண்டுகள் ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்பது தெரியுமா? நாங்கள் இப்போது குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பிவிட்டார் என்கிறார்கள். ஆளுநர் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இப்படி செய்தார்? என்று நீதிபதிகள் கேட்டனர்.

சட்ட பிரிவு

சட்ட பிரிவு

இதையடுத்து சட்டப்பிரிவு 432 படி குடியரசுத் தலைவருக்கு இதில் முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது என்று மத்திய அரசு வாதம் வைத்தது. மத்திய அரசுக்கு மட்டுமே இதில் முடிவெடுக்க கூடுதல் அதிகாரம் உள்ளது. இந்த சட்டம் மாநில அரசு மத்திய அரசுக்கும் பொருந்தும் என்றாலும், விசாரணை ஆணையம் எது என்பதை பொறுத்து மத்திய அரசு முடிவு எடுக்கலாம்.

தமிழ்நாடு அரசு வாதம்

தமிழ்நாடு அரசு வாதம்

இதையடுத்து தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், ஆளுநர் விருப்பு, வெறுப்புகளை தாண்டி செயல்பட வேண்டும். மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் ஆளுனர் தனது தனி முடிவுகளை எடுக்க கூடாது. யாரை விடுக்க விடும், விடுவிக்க கூடாது என்று முடிவெடுக்க அமைச்சரவைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதில் ஆளுநர் தனி முடிவை எடுக்க முடியாது. அமைச்சரவை முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட்டவர்.

அதிகாரம் யாருக்கு?

அதிகாரம் யாருக்கு?

மத்திய அரசு இந்த விவகாரத்தில் தனக்கு அதிகாரம் இருப்பதாக கூறுகிறது. அதுவே குழப்பங்களுக்கு காரணம். ஆளுநர் தனது கடமையை செய்யவில்லை. அவர் தன்னை மட்டுமின்றி இந்த விவாகரத்திற்கு உள்ளே குடியரசுத் தலைவரையும் கொண்டு வந்துள்ளார். ஆளுநர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டவர். அவர் அதில் முடிவு எடுக்க வேண்டும். மாறாக 3 வருடமாக ஒரு முடிவை கிடப்பில் போட கூடாது.

பெரிய பிழை

பெரிய பிழை

அரசியல் சாசன ரீதியாக மிகப்பெரிய பிழையை ஆளுநர் செய்துவிட்டார். ஆளுநர் அமைச்சரவை முடிவை ஏற்கவில்லை. அவர் இப்படி செய்தது பிழை. குடியரசுத் தலைவரை 161 சட்ட விதிக்கு கீழ் கொண்டு வர முடியாது. அது ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம். அதில் அவர்தான் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டு முடிவு எடுக்க வேண்டும். அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி முடியாது. இந்த விவகாரத்தில் அவர்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையை அழித்துவிட்டனர். கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என எங்கும் குறிப்பிடப்படவில்லை.

 அதிகாரம் இல்லை

அதிகாரம் இல்லை

மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ள முதன்மை அதிகாரம் இந்த விவகாரத்தில் பொருந்தாது. மாநில அமைச்சரவை எடுத்த முடிவை ஆளுனர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. இதில் நீங்கள் குடியரசுத் தலைவரை கொண்டு வர முடியாது என்று தமிழ்நாடு அரசு வாதம் வைத்தது. இதையடுத்து.. மத்திய அரசு வழக்கறிஞர் எந்த அடிப்படையில் மாநில அரசின் ஆளுநருக்காக ஆஜராகிறார் என்று கேட்டார்.

 தீர்ப்பு

தீர்ப்பு


இதையடுத்து வாதம் வைத்த மத்திய அரசு, IPCயின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு கருணை வழங்கும் விவகாரத்தில், சட்டவிதிகளை மீறி அமைச்சரவையின் முடிவு இருந்தால் அதனை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு மத்திய அரசு வாதம் வைத்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

English summary
They have destroyed the very basics of federalism says TN Govt in SC on Perarivalan case. பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் அவர்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையை அழித்துவிட்டனர். கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு தான் உள்ளது என எங்கும் குறிப்பிடப்படவில்லை என்று தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம் வைத்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X