திருப்பரங்குன்றம் வழக்கில்.. எங்க கருத்தை கேட்காமல்.. உச்ச நீதிமன்றத்தில் ராம ரவிக்குமார் கேவியட் மனு
டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை ராம ரவிக்குமார் தாக்கல் செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது காசிவிசுவநாதர் கோவில், தீபத்தூண், சிக்கந்தர் தர்கா உள்ளிட்டவை உள்ளன. இதில், கார்த்திகை நாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1 ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், கார்த்திகை நாளில் அங்கு தீபம் ஏற்றப்படவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி தீபம் வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் ஏற்றப்பட்டது.
இதையடுத்து தீபம் ஏற்றலாம் என்று பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர் தர்ப்பில் , உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது சிக்கந்தர் தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம், ராம ரவிக்குமார் தரப்பு என பல்வேறு தரப்பினர் சார்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
இந்த வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்ற நிலையில், அரசின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதையடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வருகிற கார்த்திகை மாத தீப திருநாளன்று கோவில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றச்செல்லும் குழுவினருடன் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது.
தீபம் ஏற்றுவதற்கு எத்தனை பேர் செல்வது என்பதை தொல்லியல் துறையினரும், காவல்துறையினரும் சேர்ந்து முடிவு செய்யலாம். இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும்" என்று பரபரப்பு உத்தரவு பிறப்பித்தது.
கேவியட் மனு தாக்கல்
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கூறினார். இல்லாத ஒன்றை புகுத்த நினைக்க கூடாது. தீபம் ஏற்ற சொல்லிய இடமானது தீபத்தூணே இல்லை. அங்கு தீபம் ஏற்றியதற்கான சான்றுகள் எங்காவது இருக்கிறதா? ஆங்கிலேயர் காலமோ, காமராஜர் காலமோ அங்கு தீபம் ஏற்றியதற்கான சான்றுகள் இருக்கிறதா? இப்படி இல்லாத ஒன்றை செய்ய சொல்வது எப்படி நியாயம் ஆகும் என்பது தான் மக்களின் கேள்வி என ரகுபதி கூறியிருந்தார்.
இந்த நிலையில், ராம ரவிக்குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனக்கோரி கேவியட் மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications