Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் வழக்கில்.. எங்க கருத்தை கேட்காமல்.. உச்ச நீதிமன்றத்தில் ராம ரவிக்குமார் கேவியட் மனு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை ராம ரவிக்குமார் தாக்கல் செய்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை மீது காசிவிசுவநாதர் கோவில், தீபத்தூண், சிக்கந்தர் தர்கா உள்ளிட்டவை உள்ளன. இதில், கார்த்திகை நாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

Thiruparankundram Supreme Court Tamil Nadu government

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1 ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், கார்த்திகை நாளில் அங்கு தீபம் ஏற்றப்படவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி தீபம் வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் ஏற்றப்பட்டது.

இதையடுத்து தீபம் ஏற்றலாம் என்று பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர் தர்ப்பில் , உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது சிக்கந்தர் தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம், ராம ரவிக்குமார் தரப்பு என பல்வேறு தரப்பினர் சார்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

இந்த வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்ற நிலையில், அரசின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதையடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வருகிற கார்த்திகை மாத தீப திருநாளன்று கோவில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றச்செல்லும் குழுவினருடன் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது.

தீபம் ஏற்றுவதற்கு எத்தனை பேர் செல்வது என்பதை தொல்லியல் துறையினரும், காவல்துறையினரும் சேர்ந்து முடிவு செய்யலாம். இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும்" என்று பரபரப்பு உத்தரவு பிறப்பித்தது.

கேவியட் மனு தாக்கல்

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கூறினார். இல்லாத ஒன்றை புகுத்த நினைக்க கூடாது. தீபம் ஏற்ற சொல்லிய இடமானது தீபத்தூணே இல்லை. அங்கு தீபம் ஏற்றியதற்கான சான்றுகள் எங்காவது இருக்கிறதா? ஆங்கிலேயர் காலமோ, காமராஜர் காலமோ அங்கு தீபம் ஏற்றியதற்கான சான்றுகள் இருக்கிறதா? இப்படி இல்லாத ஒன்றை செய்ய சொல்வது எப்படி நியாயம் ஆகும் என்பது தான் மக்களின் கேள்வி என ரகுபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், ராம ரவிக்குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனக்கோரி கேவியட் மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+