திருப்பரங்குன்றம் வழக்கில்.. எங்க கருத்தை கேட்காமல்.. உச்ச நீதிமன்றத்தில் ராம ரவிக்குமார் கேவியட் மனு
டெல்லி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவை ராம ரவிக்குமார் தாக்கல் செய்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை மீது காசிவிசுவநாதர் கோவில், தீபத்தூண், சிக்கந்தர் தர்கா உள்ளிட்டவை உள்ளன. இதில், கார்த்திகை நாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்று இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீப திருவிழா அன்று தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த மாதம் 1 ஆம் தேதி உத்தரவிட்டார். ஆனால், கார்த்திகை நாளில் அங்கு தீபம் ஏற்றப்படவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி தீபம் வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் ஏற்றப்பட்டது.
இதையடுத்து தீபம் ஏற்றலாம் என்று பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை காவல் ஆணையர் தர்ப்பில் , உயர் நீதிமன்ற டிவிஷன் அமர்வில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது சிக்கந்தர் தர்கா நிர்வாகம், வக்பு வாரியம், திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம், ராம ரவிக்குமார் தரப்பு என பல்வேறு தரப்பினர் சார்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
இந்த வழக்கில் காரசார வாதங்கள் நடைபெற்ற நிலையில், அரசின் மேல் முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதையடுத்து தீர்ப்பு கூறிய நீதிபதி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் வருகிற கார்த்திகை மாத தீப திருநாளன்று கோவில் நிர்வாகம் தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றச்செல்லும் குழுவினருடன் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது.
தீபம் ஏற்றுவதற்கு எத்தனை பேர் செல்வது என்பதை தொல்லியல் துறையினரும், காவல்துறையினரும் சேர்ந்து முடிவு செய்யலாம். இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஒருங்கிணைத்து மேற்பார்வையிட வேண்டும்" என்று பரபரப்பு உத்தரவு பிறப்பித்தது.
கேவியட் மனு தாக்கல்
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி கூறினார். இல்லாத ஒன்றை புகுத்த நினைக்க கூடாது. தீபம் ஏற்ற சொல்லிய இடமானது தீபத்தூணே இல்லை. அங்கு தீபம் ஏற்றியதற்கான சான்றுகள் எங்காவது இருக்கிறதா? ஆங்கிலேயர் காலமோ, காமராஜர் காலமோ அங்கு தீபம் ஏற்றியதற்கான சான்றுகள் இருக்கிறதா? இப்படி இல்லாத ஒன்றை செய்ய சொல்வது எப்படி நியாயம் ஆகும் என்பது தான் மக்களின் கேள்வி என ரகுபதி கூறியிருந்தார்.
இந்த நிலையில், ராம ரவிக்குமார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தி கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் வழக்கில் மேல் முறையீடு செய்யப்பட்டால் தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது எனக்கோரி கேவியட் மனுவானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications