திருப்பரங்குன்றம் கோயிலை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க கோரிய வழக்கு! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலை (Thiruparankundram temple case) ஆய்வுக்காக இந்தியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்த விவகாரத்தில் விளக்கமளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்படும். அது வழக்கமாக அங்குள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும் நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தனியாக விசாரணையில் இருக்கிறது.

Thiruparankundram Supreme court

இதற்கிடையே திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்து தர்ம பரிஷத் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபத்தைத் தினமும் 24 மணிநேரமும் நிரந்தரமாக ஏற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை அன்று முழு மலையும் விளக்குகளால் ஒளிர வேண்டும், முருக பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், அறநிலை துறையிடம் இருந்து கோயில் நிர்வாகத்தைப் பெற்று ஆய்வுக்காக இந்தியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+