திருப்பரங்குன்றம் கோயிலை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க கோரிய வழக்கு! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
டெல்லி: மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலை (Thiruparankundram temple case) ஆய்வுக்காக இந்தியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்த விவகாரத்தில் விளக்கமளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்படும். அது வழக்கமாக அங்குள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும் நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தனியாக விசாரணையில் இருக்கிறது.

இதற்கிடையே திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்து தர்ம பரிஷத் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபத்தைத் தினமும் 24 மணிநேரமும் நிரந்தரமாக ஏற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை அன்று முழு மலையும் விளக்குகளால் ஒளிர வேண்டும், முருக பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், அறநிலை துறையிடம் இருந்து கோயில் நிர்வாகத்தைப் பெற்று ஆய்வுக்காக இந்தியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
-
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம்












Click it and Unblock the Notifications