திருப்பரங்குன்றம் கோயிலை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க கோரிய வழக்கு! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு
டெல்லி: மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலை (Thiruparankundram temple case) ஆய்வுக்காக இந்தியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இந்த விவகாரத்தில் விளக்கமளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்படும். அது வழக்கமாக அங்குள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும் நிலையில், மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தனியாக விசாரணையில் இருக்கிறது.

இதற்கிடையே திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இந்து தர்ம பரிஷத் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபத்தைத் தினமும் 24 மணிநேரமும் நிரந்தரமாக ஏற்ற வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை அன்று முழு மலையும் விளக்குகளால் ஒளிர வேண்டும், முருக பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், அறநிலை துறையிடம் இருந்து கோயில் நிர்வாகத்தைப் பெற்று ஆய்வுக்காக இந்தியத் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த விவகாரத்தில் மத்திய அரசு, தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு அரசுக்கு விளக்கமளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
-
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications