"நீதிபதிகள் நியமனம்" கொலிஜியம் முறையே சிறந்தது.. உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி கருத்து!
நீதித்துறையில் அரசின் அழுத்தம் இல்லை என்பதற்கு தேர்தல் ஆணைய வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே சிறந்த சான்று எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
டெல்லி: கொலிஜியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், கொலிஜியம் முறைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி .ஒய் சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், நீதித்துறையில் அரசின் அழுத்தம் இல்லை என்பதற்கு தேர்தல் ஆணைய வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே சிறந்த சான்று எனவும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நீதிபதிகளை நியமனம் செய்ய கொலிஜியம் என்ற அமைப்பு உள்ளது. இந்த கொலிஜியம்தான் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமனம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளை இந்த கொலிஜியம் தேர்வு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது. பிறகு மத்திய அரசு ஒப்புதல் அளித்து நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர்.

வெளிப்படத்தன்மை இன்றி இருப்பதாக
இந்த கொலிஜியம் செயல்படும் முறையில் வெளிப்படத்தன்மை இன்றி இருப்பதாக மத்தியில் ஆளும் பாஜக அரசு முன்வைக்கும் விமர்சனமாக உள்ளது. குறிப்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கொலிஜியத்திற்கு எதிராக அவ்வப்போது கருத்துக்களை முன்வைத்து வருகிறார். தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே நீதிபதியாக வேண்டும். கொலிஜியம் அமைப்பிற்கு தெரிந்தவர்கள் அல்ல என்று கூட கிரண் ரிஜிஜூ கூறி வருகிறார்.

கொலிஜியம் முறைக்கு ஆதரவாக கருத்து
கொலிஜியஜ் அமைப்பு ஏலியன் போல செயல்படுவதாகக் கூட கிரண் ரிஜிஜூ கடுமையாக சாடியிருந்தார். கொலிஜியம் விவகாரத்தில் மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், கொலிஜியம் முறைக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி .ஒய் சந்திரசூட் கருத்து தெரிவித்துள்ளார். இந்தியா டூடே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தலைமை நீதிபதி கூறியதாவது:-

நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதே
அனைத்து முறைகளும் சிறந்தவையாக இல்லை. ஆனால், நமக்கு இருப்பதில் இதுதான் சிறந்த முறையாக உள்ளது. நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதே இதன் நோக்கம் ஆகும். இதுதான் அடிப்படை கொள்கையாகும். நீதித்துறை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்றால் நீதித்துறையை வெளிப்புற தலையீடுகளில் இருந்து நாம் பாதுகாக்க வேண்டும். மாறுபட்ட பார்வை கொண்டிருப்பதில் என்ன தவறு உள்ளது? எனினும், இந்த வேறுபாடுகளை வலுவான அரசியல் அமைப்பின் சிறந்த வழிகளின் படி நான் கையாள வேண்டும். சட்ட அமைச்சருடன் பிரச்சினைகளுக்குள் நான் செல்ல செல்ல விரும்பவில்லை. நாங்கள் மாறுபட்ட பார்வைகளை கொண்டு இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

நீதித்துறையில் அரசின் அழுத்தம் இல்லை
மேலும், வழக்குகளை எப்படி முடிவு செய்ய வேண்டும் என்பதில் அரசிடம் இருந்து எந்த ஒரு அழுத்தமும் வந்தது கிடையாது என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நீதிபதியாக எனது 23 ஆண்டு கால அனுபவத்தில் ஒரு வழக்கை எப்படி முடிவு செய்ய வேண்டும் என்று ஒருவர் கூட என்னிடம் வந்து கூறியது இல்லை. அரசிடம் இருந்து முற்றிலும் ஒரு அழுத்தம் கூட வந்தது கிடையாது. நீதித்துறையில் அரசின் அழுத்தம் இல்லை என்பதற்கு தேர்தல் ஆணைய வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே சிறந்த சான்றாகும்" என்றார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications