Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கருணாநிதிக்கு ‘தங்க பேனா’ பரிசளித்த விஜயகாந்த் "இதை எழுதியிருக்க " வாய்ப்பில்ல - திமுக எம்பி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கருணாநிதிக்கு பேனா வடிவிலான நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விஜயகாந்த் பெயரில் அறிக்கை வந்திருந்தாலும் அது அவரது எண்ணமாக இருக்காது என்பது குழந்தைக்கு கூட தெரியும் என்று திமுக ராஜ்ஜியசபா எம்.பி. எம்.எம்.அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "மறைந்த தலைவர் கலைஞருக்கு பேனா வடிவிலான நினைவுச் சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பெயரில் ஒரு அறிக்கை வந்திருக்கிறது.

அவர் பெயரில் அந்த அறிக்கை வந்திருந்தாலும் உண்மையில் அது அவருடைய எண்ணமாக இருக்காது என்பதை தமிழ்நாட்டில் உள்ள குழந்தை கூட அறியும்!!

விஜயகாந்த் கொடுத்த தங்க பேனா

விஜயகாந்த் கொடுத்த தங்க பேனா


1996 ஆம் ஆண்டு அப்போதைய நடிகர் சங்கத் தலைவராக இருந்த கேப்டன் அதே மெரினா கடற்கரையில் தலைவர் கலைஞரின் திரை உலகப் பொன் விழாவிற்காக அவருக்கு விழா எடுத்து "தங்க பேனாவை" பரிசாக அளித்தார்!
கேப்டனின் பெயரில் இந்த அறிக்கையை வெளியிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒன்றை மாத்திரம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சினிமாவுக்காக வைக்கப்படவில்லை

சினிமாவுக்காக வைக்கப்படவில்லை

இது தலைவர் கலைஞர் பல்வேறு வெற்றித் திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியதாலோ அல்லது பல்வேறு புதினங்கள், சிறு கதைகள், தொடர்கள் எழுதியதாலோ வைக்கப்படும் பேனா சின்னம் அல்ல! இந்தப் பேனாதான் இட ஒதுக்கீட்டிற்கு கையெழுத்து போட்டு எண்ணற்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூக மற்றும் சிறுபான்மை மக்கள் கல்வி நிலையங்களில் நுழையவும் அரசு வேலை வாய்ப்புகளைப் பெறவும் காரணமாக இருந்தது!

கருணாநிதியின் கையெழுத்துக்கள்

கருணாநிதியின் கையெழுத்துக்கள்

கலைஞரின் இந்தப் பேனாதான் மகளிருக்கு சொத்தில் சம பங்கு உண்டு என்று கையெழுத்துப் போட்டு பெண்களுக்கு அப்பன் சொத்தில் பங்கை வாங்கித் தந்தது! இந்தப் பேனாதான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் அரசாணையில் கையெழுத்துப் போட்டு அவர்கள் குடும்பத்தைக் காப்பாற்றியது!

Recommended Video

    Tamilnadu-ல் பெண்கள் நலனை முன்னிலைப்படுத்திய திராவிடம் - டாக்டர் ராதிகா முருகேசன்
    தவறே இல்லை

    தவறே இல்லை

    இந்தப் பேனாவில் போட்ட கையெழுத்துதான் பல்வேறு சமூகநீதித் திட்டங்களை தமிழகத்தில் உருவாக்கியது! தமிழர்களின் வாழ்வை தமிழ்நாட்டை மேம்படுத்தி சமூகநீதியைக் காத்து வளர்ச்சியை உறுதி செய்தது. எனவே கோடிக்கணக்கான தமிழர்களை நலம் பெறச் செய்த அந்த பேனாவிற்கு சில கோடியில் சிலை வைப்பதில் ஒன்றும் தவறே இல்லை! வாழ்க தலைவர் கலைஞர்! ஓங்குக அவரது புகழ்!!" என்று பதிவிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+