என்ன நடக்குது? பிரதமர் மோடியின் கல்வி சான்று கேட்டால் அபராதமா? கொதித்து கேள்வி எழுப்பிய கெஜ்ரிவால்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சான்றிதழ்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவால் விரக்தி அடைந்த நிலையில் ‛‛பிரதமரின் கல்வி குறித்து அறியும் உரிமை கூட நாட்டு மக்களுக்கு இல்லையா? அவரது சான்றிதழை பார்க்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? இங்கு என்ன நடக்கிறது?'' என பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.
குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடந்த 2014 முதல் தொடர்ந்து பிரதமராக இருந்து வருகிறார். இவரது படிப்பு விஷயம் தொடர்பாக அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.
பிரதமர் மோடி 1978 ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பையும், 1983ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பையும் முடித்ததாக கூறப்படுகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்
இருப்பினும் ஆம்ஆத்மி உள்பட பல எதிர்க்கட்சிகள் பிரதமர் நரேந்திர மோடியின் படிப்பின் மீது சந்தேகம் கிளப்பி வருகின்றன. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி படித்தது உண்மையா? இல்லையா? என்பதை அறிய ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்தார்.

உத்தரவிட்ட தகவல் ஆணையம்
இதையடுத்து அவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தலைமை தகவல் ஆணையம் மூலம் டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திடம் பிரதமர் நரேந்திர மோடியின் படிப்பு தொடர்பான சான்றிதழ்களை அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டிருந்தார். இதையடுத்து பிரதமர் மோடி குறித்த சான்றுகளை வழங்க தலைமை தகவல் ஆணையம் கடந்த 2016ல் உத்தரவிட்டது.

ரூ.25 ஆயிரம் அபராதம்
இதனை எதிர்த்து குஜராத் உயர்நீதிமன்றத்தை குஜராத் பல்கலைக்கழகம் நாடியது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி நீதிபதி பீரன் வைஷ்ணவ் தீர்ப்பு வழங்கினார். அப்போது தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்த அவர் பிரதமர் மோடியின் சான்றிதழ் பற்றிய விவரங்களைக் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார். இந்த அபராதத்தை 4 வாரத்தில் செலுத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கெஜ்ரிவால் கேள்வி
இந்நிலையில் தான் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில், ‛‛பிரதமரின் கல்வி குறித்து அறியும் உரிமை கூட நாட்டு மக்களுக்கு இல்லையா? பிரதமர் ஏன் நீதிமன்றத்தில் தனது பட்டப்படிப்பு சான்றிதழை காட்ட மறுத்துவிட்டார்? அவரது சான்றிதழை பார்க்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? இங்கு என்ன நடக்கிறது? படிப்பறிவில்லாத அல்லது குறைவான கல்வியறிவு பெற்ற பிரதமர் நாட்டுக்கு மிகவும் ஆபத்தானவர்'' என விமர்சனம் செய்துள்ளார்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications