பிஞ்சுவை.. கதற கதற.. ஒரு கொலையை செய்ய இன்னொரு கொலை.. திகாரை நடுங்க வைத்த ஜாகீர்!
திகார் ஜெயிலில் நண்பனை குத்தி கொன்ற பயங்கரம் நடந்துள்ளது
டெல்லி: வஞ்சம் தீர்ப்பது என்று முடிவெடுத்துவிட்டால், எத்தனை காலமாக இருந்தால் என்ன? என்ன வழியாக இருந்தால் என்ன? அந்த வகையில்,பழிக்கு பழி தீர்த்து கொலை செய்த நபரை கண்டு டெல்லி போலீசாரே அதிர்ந்து போய் உள்ளனர்.
டெல்லியின் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் 21 வயது ஜாகிருக்கு, தன் தங்கை மீது அப்படி ஒரு பாசம்.. மைனர் பெண்.. தங்கையை உயிருக்கு உயிராக நேசித்து வருகிறார் ஜாகிர்.

ஜாகிரின் நண்பர் மெஹ்தாப்.. 27 வயதாகிறது.. ரொம்ப வருஷமாகவே இவர்கள் குடும்ப நண்பர்கள்.. அதனால் வீட்டுக்கு வந்து போக இருந்தனர்.. இந்நிலையில் ஒருநாள் ஜாகிரின் சகோதரியை மெஹ்தாப் கதற கதற பலாத்காரம் செய்துவிடுகிறார்.
இதனால் அவமானமும், மன வேதனையும் அடைந்த அந்த பிஞ்சு, தற்கொலை செய்து கொள்கிறது.. இந்த வழக்கில் மெஹ்தாப் கைதாகி ஜெயிலில் அடைக்கப்படுகிறார்.
ஆனாலும் ஜாகிருக்கு ஆத்திரமாக கிளம்புகிறது.. நம்பிக்கை துரோகம் செய்து கழுத்தறுத்து, குடும்பத்தை கெடுத்த அந்த நண்பனை பழிவாங்க ஜாகீர் முடிவு செய்கிறார்.. ஆனால், குற்றவாளி ஜெயிலில் இருப்பதால் அவனை எப்படி கொல்வது என்பது தெரியாமல் விழிக்கிறார்.. காரணம், குற்றவாளி இருப்பது திகார் ஜெயிலில்.
அதனால் அந்த ஜெயிலுக்கு செல்ல வேண்டுமானால் தான் இன்னொரு கொலையை செய்தால்தான் முடியும் என்று நம்புகிறார்.. ஜாகிரின் மனதில் ஆறாத வடுவாக தங்கிவிட்ட அந்த காயம், மற்றொரு கொலையை செய்ய தூண்டியது.. யாரோ ஒருவரை தேவையில்லாமல் கொன்றுவிட்டு, திகாருக்குள் நுழைகிறார் ஜாகிர்.
ஆனால், அங்கும் மெஹ்தாபிடம் நெருங்க முடியாத சூழல்.. மெஹ்தாப் இருப்பது சற்று தூரமான இடத்தில், ஜாகீர் சிறை அறை இருந்தது.. அதனால் குற்றவாளியை நெருங்கி செல்ல என்ன வழி என்று யோசிக்கிறார்.. பிறகு தன்னுடன் இருந்த தன்னுடைய சிறைவாசிகளிடம் தொடர்ந்து சண்டை போட ஆரம்பிக்கிறார் ஜாகிர்.
பொறுத்து பொறுத்து போன சிறைவாசிகள், வார்டனுக்கு புகார் சொல்கிறார்கள்.. உடனே சிறை அதிகாரிகள், வேறு இடத்தில் அடைக்கிறார்கள்.. அந்த இடமும் மெஹ்தாப் சிறை அருகில் இல்லை என்பதால், திரும்பவும் வம்பிழுத்து, மெஹ்மாப் அறை அருகில் செல்லும்வரை போராடுகிறார்.. இறுதியாக, அந்த வாய்ப்பு ஜாகிருக்கு கிடைத்தது.
மெஹ்தாப்பை கொலை செய்ய நேரம் பார்த்து கொண்டே இருந்த ஜாகீர் ஜூன் 29 அன்று மெஹ்தாபை ஜெயிலிலேயே வைத்து படுகொலை செய்தார். இந்த கொலையை செய்து முடிக்க ஜாகிருக்கு 6 வருடங்கள் பிடித்தது. இதற்காகவே கத்தி போன்ற உலோக துண்டை ரெடி செய்து கையிலேயே வைத்திருந்தார் ஜாகீர். ஆத்திரம் தீர குத்தி குத்தியே மெஹ்தாபை கொன்று முடித்தார்... சினிமாவை மிஞ்சும் இந்த பழிவாங்கிய படலத்தை கேட்டு போலீசாரே மிரண்டு போயுள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications