நிர்பயா கொலையாளிகளை தூக்கிலிட தயாராகும் டெல்லி திகார் சிறை.. கடைசி விருப்பங்களை கேட்டது
Recommended Video
டெல்லி: நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1-ந் தேதி தூக்கிலிட டெல்லி திகார் சிறை தயாராகி வருகிறது. 4 குற்றவாளிகளின் கடைசி விருப்பங்களை திகார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது.
நிர்பயா கொலை வழக்கில் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான பணிகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால் அடுத்தடுத்து புதிய புதிய மனுக்களை கொலையாளிகள் தாக்கல் செய்தனர்.

அதேபோல் கருணை மனுக்களையும் அளித்தனர். இவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. அத்துடன் பிப்ரவரி 1-ந் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளது.
மேலும் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடாமல் இருப்பதும் அரசியல் பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறும் நிலையில் இப்பிரச்சனை தேர்தலிலும் எதிரொலிக்கும் நிலை உள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி 4 குற்றவாளிகளையும் பிப்ரவர் 1-ந் தேதி தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கூடுதல் ஐஜி ராஜ்குமார் கூறியதாவது:
4 குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கு முன்பாக அவர்களது கடைசி விருப்பங்கள் எழுதிக் கொடுக்குமாறு கேட்டுள்ளோம். 4 பேரின் பதில்களுக்காக காத்திருக்கிறோம். இதுவரை 4 பேரும் எந்த பதிலும் தரவில்லை.
தங்களது விருப்பங்களை 4 பேரும் தெரிவித்த பின்னர் அது நிறைவேற்றக் கூடியதுதானா என்பதை சிறை நிர்வாகம் ஆலோசித்து முடிவெடுக்கும். தூக்கு தண்டனை கைதிகளின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற முடியாது. இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.
மேலும் கடைசியாக யாரையும் சந்திக்க விரும்புகிறீர்களா? ஏதேனு சொத்துகள் அல்லது உடைமைகளை விரும்பும் நபர்களுக்கு மாற்றித் தர விரும்புகிறீர்களா? என்பது உள்ளிட்ட கேள்விகளும் தூக்கு தண்டனை கைதிகளிடம் கேட்கப்பட்டிருப்பதாகவும் திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications