Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மஹுவா மொய்த்ராவுக்கு சிக்கல்.. சம்மன் அனுப்பிய லோக்சபா நெறிமுறை குழு.. அடுத்து என்ன நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபாவில் அதானி முறைகேடு குறித்த கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக எழுந்துள்ள புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதுபற்றி தற்போது நாடாளுமன்ற நெறிமுறை குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தான் அங்கு முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்பி மஹுவா மொய்த்ரா.

Tinamool Congress MP Mahua moitra Summoned by Ethics Committee of Lok Sabha

இவர் தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக அதானி மீதான முறைகேடு குறித்து நாடாளுமன்றம் மற்றும் வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்.

இந்நிலையில் தான் லோக்சபாவில் அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதற்கான மஹுவா மொய்த்ரா எம்பி தொழிலதிபர் தர்ஷன் ஹிராந்நதானியிடம் இருந்து பணம், பரிசு பொருட்கள் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே தான் லோக்சபாவில் அதானி குறித்து கேள்வி கேட்க மஹுவா மொய்த்ரா எம்பிக்கு லஞ்சம் கொடுத்ததை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஒப்புக்கொண்டுள்ளார். பணம் வழங்கியதாகவும், வெளிநாடு பயணங்களுக்கான செலவை ஏற்றதாகவும் அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தான் நாடாளுமன்ற நெறிமுறைக்குழுவில் இன்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ரி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.

இதையடுத்து தான் மஹுவா மொய்த்ரா எம்பிக்கு நாடாளுமன்ற நெறிமுறைக்குழு சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் புகார் தொடர்பான விசாரணைக்கு வரும் 31ம் தேதி ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பவும் நெறிமுறைக்குழு முடிவு செய்துள்ளது.

அதோடு மட்டுமின்றி மஹுவா மொய்த்ரா வெளிநாடுகளுக்கு சென்ற விபரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெறவும் நெறிமுறைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விசாரணையின்போத மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம். இதனால் மஹுவா மொய்த்ராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+