மஹுவா மொய்த்ராவுக்கு சிக்கல்.. சம்மன் அனுப்பிய லோக்சபா நெறிமுறை குழு.. அடுத்து என்ன நடக்கும்?
டெல்லி: லோக்சபாவில் அதானி முறைகேடு குறித்த கேள்வி எழுப்ப தொழிலதிபரிடம் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பி மஹுவா மொய்த்ரா பணம் பெற்றதாக எழுந்துள்ள புகார் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதுபற்றி தற்போது நாடாளுமன்ற நெறிமுறை குழு விசாரணை நடத்தி வரும் நிலையில் மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தான் அங்கு முதல்வராக உள்ளார். இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா எம்பி மஹுவா மொய்த்ரா.

இவர் தொடர்ந்து பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக அதானி மீதான முறைகேடு குறித்து நாடாளுமன்றம் மற்றும் வலைதளங்களில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்.
இந்நிலையில் தான் லோக்சபாவில் அதானி விவகாரம் குறித்து கேள்வி எழுப்புவதற்கான மஹுவா மொய்த்ரா எம்பி தொழிலதிபர் தர்ஷன் ஹிராந்நதானியிடம் இருந்து பணம், பரிசு பொருட்கள் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் லோக்சபாவில் அதானி குறித்து கேள்வி கேட்க மஹுவா மொய்த்ரா எம்பிக்கு லஞ்சம் கொடுத்ததை தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஒப்புக்கொண்டுள்ளார். பணம் வழங்கியதாகவும், வெளிநாடு பயணங்களுக்கான செலவை ஏற்றதாகவும் அவர் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தான் நாடாளுமன்ற நெறிமுறைக்குழுவில் இன்று பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ரி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
இதையடுத்து தான் மஹுவா மொய்த்ரா எம்பிக்கு நாடாளுமன்ற நெறிமுறைக்குழு சார்பில் சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் புகார் தொடர்பான விசாரணைக்கு வரும் 31ம் தேதி ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பவும் நெறிமுறைக்குழு முடிவு செய்துள்ளது.
அதோடு மட்டுமின்றி மஹுவா மொய்த்ரா வெளிநாடுகளுக்கு சென்ற விபரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெறவும் நெறிமுறைக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விசாரணையின்போத மஹுவா மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆனால் அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம். இதனால் மஹுவா மொய்த்ராவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications