யஷ்வந்த் சின்ஹா வெற்றி வாய்ப்பு பிரகாசம்.. திமுக முடிவை மாற்றிக் கொள்ளாது - திருச்சி சிவா பேட்டி!
டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக எம்.பி திருச்சி சிவா டெல்லியில் இன்றுச் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக தனது முடிவை மாற்றிக் கொள்ளாது. எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை ஒருமனதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் முடிவெடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆலோசனைக் கூட்டங்கள்
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடக்கிறது. ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வரும் 29ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசிநாள். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளரை தேர்வு செய்ய கடந்த சில நாட்களாக எதிர்க்கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்று ஆலோசித்து வந்தன.

யஷ்வந்த் சின்ஹா
சரத் பவார், ஃபரூக் அப்துல்லா, கோபால கிருஷ்ண காந்தி ஆகியோரிடம் குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்க கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மூவருமே அந்த வேண்டுகோளை நிராகரித்தனர். இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவை பொது வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் ஒருமனதாக முடிவு செய்துள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி சிவா
இந்நிலையில், திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர், "அரசியலில் அனுபவம் நிறைந்தவர் யஷ்வந்த் சின்ஹா என்பதால் அவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்த ஒருமனதாக அனைத்து எதிர்க்கட்சிகளும் முடிவெடுத்துள்ளோம். இந்தியாவின் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் நிகழ்ந்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. இந்த சூழ்நிலையில்தான் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவெடுக்கப்பட்டது.

திமுக முடிவு
தற்போது எதிர்க்கட்சிகள் தரப்பில் நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா சிறந்த வேட்பாளர் ஆவார். குடியரசுத் தலைவர் தேர்தலில் திமுக தனது முடிவை மாற்றிக் கொள்ளாது. எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications