மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அமைச்சர் பிடிஆர் திடீர் சந்திப்பு.. காரணம் இதுதான்!
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக தகவல் தொழில் நுட்ப துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சந்தித்தார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. நிர்மலா சீதாரமனுடனான சந்திப்பு குறித்த தகவலை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகாரஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது:-

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. வருமான வரித் தரவுகளுடன் ஏபிஐ இணைப்பைப் பெற்ற முதல் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றியதற்காக நன்றி தெரிவித்தேன். அதுமட்டும் இன்றி நான் நிதி அமைச்சராக இருந்த போதும் ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினராக இருந்த சமயத்திலும் ஒத்துழமைப்பு வழங்கியதற்காக அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றியை தெரிவித்தேன்.
மழைக்கால கூட்டத்தொடருக்கு நடுவே அவர் எனக்கு நேரம் ஒதுக்கி கொடுத்ததற்கு நன்றி" இவ்வாறு பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:- வருமான வரி தாக்கல் செய்பவர்களின் விவரங்கள் மாநில அரசுகளுக்கு அளிக்கப்பட்டால் அதை வைத்து நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு சேவைகளை அளிப்பதை சரிபார்க்கலாம் என தொடர்ந்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக வருமான வரி தாக்கல் செய்பவர்கள் 35 லட்சம் பேரின் விவரங்கள் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் பல திட்டங்கள் குறிப்பாக மகளிர் உரிமை தொகை திட்டம் உள்பட பல திட்டங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தகவல் தொழில்நுட்ப துறையில் டிஎன்இஜிஏ மூலமாக தகவல் பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகம் வைத்த கோரிக்கையை ஏற்று இந்த முன்மாதிரி திட்டத்தை செய்து கொடுத்ததற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து நன்றி கூறினேன்" என்றார். முன்னதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும், இதே தகவல் பகிரப்பட்டு இருந்தது. இருவரும் சந்தித்து பேசியது தொடர்பான புகைப்படங்களும் பதிவிடப்பட்டு இருந்தன.
தமிழக நிதி அமைச்சர் பொறுப்பில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மே மாதம் மாற்றப்பட்டார். அவர் வசம் இருந்த நிதித்துறை பொறுப்பு தங்கம் தென்னரசுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டு, அவரிடம் இருந்த ஐடி துறை அமைச்சர் பிடிஆருக்கு ஒப்படைக்கப்பட்டது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications