முல்லை பெரியாறு அணை! பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரளா தடுக்கிறது - தமிழக அரசு
டெல்லி: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரளா தடுக்கிறது என உச்சநீதிமன்றத்தில் தமிழகம் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையை பராமரிப்பது தொடர்பாக மேற்பார்வை குழு ஆய்வை மேற்கொண்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி, செப்டம்பர் மாதம் 2 ஆகிய தேதிகளும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி, மார்ச் 22 ஆகிய தேதிகளில் முல்லை பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு விரிவான ஆலோசனை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ஏற்று தமிழ்நாடு அரசு அணையை பராமரித்திருக்க வேண்டும். ஆனால் பராமரிக்கவில்லை.
தமிழ்நாடு அரசு அணையை பராமரித்தால், அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்திவிடும் என்று பயந்த கேரள அரசு, தமிழ்நாடு அரசை பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல் தடுத்தது. பராமரிப்பு பணிகளுக்கான எந்த அனுமதியையும் வழங்கவில்லை.
இதை எதிர்த்துள்ள தமிழ்நாடு அரசு, மேற்பார்வை குழு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கேரள அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும். அதேபோல, மரங்களை வெட்டி ஒதுக்குவது, படகுகள் செல்ல அனுமதிப்பது, சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.
மழைக்காலம் தொடங்கும் முன்னதாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப 2006, 2014 ஆம் ஆண்டு முல்லை பெரியாறு இறுதி தீர்புகளின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மனுவில் தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications