முல்லை பெரியாறு அணை! பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரளா தடுக்கிறது - தமிழக அரசு
டெல்லி: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரளா தடுக்கிறது என உச்சநீதிமன்றத்தில் தமிழகம் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையை பராமரிப்பது தொடர்பாக மேற்பார்வை குழு ஆய்வை மேற்கொண்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி, செப்டம்பர் மாதம் 2 ஆகிய தேதிகளும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி, மார்ச் 22 ஆகிய தேதிகளில் முல்லை பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு விரிவான ஆலோசனை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ஏற்று தமிழ்நாடு அரசு அணையை பராமரித்திருக்க வேண்டும். ஆனால் பராமரிக்கவில்லை.
தமிழ்நாடு அரசு அணையை பராமரித்தால், அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்திவிடும் என்று பயந்த கேரள அரசு, தமிழ்நாடு அரசை பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல் தடுத்தது. பராமரிப்பு பணிகளுக்கான எந்த அனுமதியையும் வழங்கவில்லை.
இதை எதிர்த்துள்ள தமிழ்நாடு அரசு, மேற்பார்வை குழு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கேரள அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும். அதேபோல, மரங்களை வெட்டி ஒதுக்குவது, படகுகள் செல்ல அனுமதிப்பது, சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.
மழைக்காலம் தொடங்கும் முன்னதாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப 2006, 2014 ஆம் ஆண்டு முல்லை பெரியாறு இறுதி தீர்புகளின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மனுவில் தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
முடிவுக்கு வந்தது இழுபறி! புதுச்சேரி, கேரளா, அசாமில் வேட்புமனுத் தாக்கல் ஓவர்! யாருக்கு வெற்றி? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications