முல்லை பெரியாறு அணை! பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரளா தடுக்கிறது - தமிழக அரசு
டெல்லி: முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவதற்கு தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள விடாமல் கேரளா தடுக்கிறது என உச்சநீதிமன்றத்தில் தமிழகம் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையை பராமரிப்பது தொடர்பாக மேற்பார்வை குழு ஆய்வை மேற்கொண்டிருந்தது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி, செப்டம்பர் மாதம் 2 ஆகிய தேதிகளும், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி, மார்ச் 22 ஆகிய தேதிகளில் முல்லை பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு விரிவான ஆலோசனை நடத்தி உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை ஏற்று தமிழ்நாடு அரசு அணையை பராமரித்திருக்க வேண்டும். ஆனால் பராமரிக்கவில்லை.
தமிழ்நாடு அரசு அணையை பராமரித்தால், அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்திவிடும் என்று பயந்த கேரள அரசு, தமிழ்நாடு அரசை பராமரிப்பு பணிகளை செய்ய விடாமல் தடுத்தது. பராமரிப்பு பணிகளுக்கான எந்த அனுமதியையும் வழங்கவில்லை.
இதை எதிர்த்துள்ள தமிழ்நாடு அரசு, மேற்பார்வை குழு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கேரள அரசுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சென்று வர அனுமதிக்க வேண்டும். அதேபோல, மரங்களை வெட்டி ஒதுக்குவது, படகுகள் செல்ல அனுமதிப்பது, சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது.
மழைக்காலம் தொடங்கும் முன்னதாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப 2006, 2014 ஆம் ஆண்டு முல்லை பெரியாறு இறுதி தீர்புகளின் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு மனுவில் தெரிவித்திருக்கிறது. இந்த வழக்கு நாளை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்! -
நவீன ட்ரோன்களால் சிக்கிய சிறுமி உடல்! கர்நாடக ட்ரெக்கிங் போதை புகாரும், போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டும் -
அடிச்ச வெயிலுக்கு.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! கொட்டப்போகும் மழை! -
நிலம் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஹென்றி சொன்ன இந்த மேஜர் விஷயத்தை பாருங்க.. அப்புறம் முடிவெடுங்க -
மழையும் இருக்கு.. வெயிலும் இருக்கு.. குழப்பி அடிக்கும் வானிலை! உஷார் மக்களே! -
வளிமண்டலத்தில் ஏற்பட்ட மாற்றம்.. சட்டென மாறிய வானிலை! மழை வெளுக்கப்போகுது! -
10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு! -
குஷ்பு ஜிம்னாஸ்டிக் சாம்பியன்.. சுந்தர் சிக்கு படித்துப் புரிந்து கொள்ளும் அறிவு இல்லை.. பிடிஆர் -
தர்மபுரியில் மருமகள் சௌமியாவுக்கு எதிராக களமிறங்க போகும் மாமனார் ராமதாஸ்.. அன்புமணி ரியாக்ஷ்ன் -
ஜுவல்லரி கடைகளுக்கு விழுந்த அடி! ஒரு ரூபாயில் தங்கம்.. இளைஞர்களின் ஸ்மார்ட் மூவ்! உரிமையாளர்கள் ஷாக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு!












Click it and Unblock the Notifications