சுங்கச்சாவடிகள் 6 மாதத்தில் அகற்றப்படும்..இனி சுங்க கட்டணம் எப்படி தெரியுமா? கட்காரி கொடுத்த அப்டேட்
டெல்லி: நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக 6 மாதத்தில் ஜி.பி.எஸ். அடிப்படையிலான கட்டண வசூல் முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
ஜிபிஎஸ் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் புதிய தொழில்நுட்பம் அடுத்த ஆறு மாதங்களில் அமல்படுத்தப்படும்.
நமது நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் பயணிக்க சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கார்கள் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு ஒரு கட்டணம் கனரக வாகனங்களுக்கு ஒரு கட்டணம் என வாகனங்களின் தன்மைக்கு ஏற்ப கட்டண விகிதங்கள் மாறுபடுகின்றன.

போக்குவரத்து நெரிசல்
துவக்கத்தில் சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் நேரடியாக பணத்தை செலுத்தி செல்லும் நிலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதோடு, கடுமையான போக்குவரத்து நெரிசலும் சுங்கச்சாவடிகளில் ஏற்பட்டது. குறிப்பாக வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் பண்டிகை நாட்களில் எல்லாம் சுங்கச்சாவடிகளில் பல நூறு மீட்டர்கள் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் கூட முன்பு இருந்தது.

சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்
அதன்பிறகு தற்போது பாஸ்ட் டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 600-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், சுங்கக் கட்டண வசூலில் புதிய நடைமுறையை அமல்படுத்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அதாவது, நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்பட்டு அவற்றுக்குப் பதிலாக 6 மாதத்தில் ஜி.பி.எஸ். அடிப்படையிலான கட்டண வசூல் முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

ஜிபிஎஸ் அடிப்படையில் கட்டணம்
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்காரி இந்த தகவலை தெரிவித்தார். நிதின் கட்காரி கூறுகையில், " நாடு முழுவதும் நெடுஞ்சாலைகளில் தற்போது உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆறு மாதங்களில் அமல்படுத்தப்படும்
ஜிபிஎஸ் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படும் புதிய தொழில்நுட்பம் அடுத்த ஆறு மாதங்களில் அமல்படுத்தப்படும். சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு, வாகன ஓட்டிகள் பயணித்த தொலைவுக்கு மட்டுமே கட்டணம் விதிக்கப்படும். சுங்க கட்டண வருவாய் தற்போது 40,000 கோடியாக உள்ள நிலையில், அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் ரூ.1.40 லட்சம் கோடியாக அதிகரிக்கும்" என்றார்.

எப்படி செயல்படுத்தப்படும்?
நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளுக்கு பதிலாக வாகனங்களின் நம்பர் பிளேட்களை பதிவு செய்து அறியும் சென்சார் கேமராக்கள் நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடங்களில் பொருத்தப்படும். அதன் மூலமாகவே நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்தை வைத்து சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய முறை மூலம் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்துவதற்காக காத்திருக்க வேண்டிய நிலை இருக்காது. பாஸ்ட் டேக் முறையில் சுங்கச்சாவடிகளில் காத்திருப்பு நேரம் வெகுவாக குறைந்தாலும் நகரங்களை ஒட்டிய சுங்கச் சாவடிகளில் நெரிசல் நேரங்களில் வாகனங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலையே காணப்படுகிறது. இதனால், புதிய முறையை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய நெடுஞ்சாலை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications