உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை
3 வடகிழக்கு மாநிலங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்க இருக்கிறது
டெல்லி: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 வடகிழக்கு மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல்கள் நடந்து முடிந்து இருக்கும் நிலையில் காலை 8 மணியளவில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து கடந்த 27 ஆம் தேதி மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு 3 மாநிலங்களிலும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்கள் காவல்துறை மற்றும் துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

பலத்த பாதுகாப்பு
3 மாநிலங்களிலும் காலை முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதை தொடர்ந்து பலத்த கண்காணிப்பு மத்தியில் பிறகு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்பட்டு உள்ளது. மேகாலயா மாநிலத்தில் 13 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

மேகாலயா வாக்கு எண்ணிக்கை
மேகாலயா மாநில முதலமைச்சரும் தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான கான்ராட் சங்மா தேர்தலை ஒட்டி அசாம் மாநில முதலமைச்சரும் பாஜகவை சேர்ந்தவருமான ஹிமந்தா பிஸ்வா சங்மாவை கவுஹாத்தியில் சந்தித்து பேசினார். மேகாலயாவில் பாஜக, என்பிபி கட்சிக்கு இடையே மோதல் போக்கு நீடித்த நிலையில் அந்த மாநில தேர்தல் முடிவுகள் உற்று நோக்கப்படுகின்றன.

திரிபுராவில் பாதுகாப்பு
பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும் தொடங்கி உள்ளன. இதன் காரணமாக வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக அசாம் மற்றும் மிசோரம் ஆகிய மாநில எல்லைகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அதேபோல் திரிபுராவில் 856 கிலோ மீட்டர் நீள இந்தியா - வங்கதேச எல்லையிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருக்கிறது.

நாகாலாந்து
நாகாலாந்து மாநிலத்திலும் 4 மாவட்டங்களிலும் மறு தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டதை தொடர்ந்து வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. அங்குள்ள 59 இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் சிஆர்பிஎப் படை மூன்று அடுத்து பாதுகாப்பு வழங்குகிறது. அனைத்து வாக்கு எண்ணும் மையங்கள் அருகிலும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications