கரூர் துயர சம்பவத்திற்கு ஆஜரான விஜய்! சிபிஐ ஆபீஸ் வாசலில் TVK கோஷம் போட்ட ரசிகர்களால் அதிர்ச்சி
டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விஜய் ஆஜராகி விளக்கம் அளித்து வரும் நிலையில் அலுவலகத்தின் வெளியே கொஞ்சம் கூட விஷயத்தின் வீரியம் புரியாமல் TVK, TVK, தளபதி என தவெக கொடியை காட்டி தொண்டர்கள் ஆரவாரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பொதுக் கூட்டம் நடத்தினார். அப்போது அவரை பார்க்க கூட்டத்தினர் முண்டியடித்த போது அங்கு நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்தை உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்பி, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட உள்ளிட்டோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதுபோல் கட்சி நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், மதியழகன் ஆகியோரிடம் 3 நாட்களாக டெல்லி சிபிஐ விசாரணை நடத்தியிருந்தது.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அதன் பேரில் விஜய் இன்று டெல்லி சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். காலை 11.30 மணிக்கு உள்ளே சென்ற விஜய்யிடம் இன்னும் விசாரணை தொடர்ந்து வருகிறது.
இவ்வாறு கட்சியின் தலைவர் விஜய் ஒரு துயரமான சம்பவத்தின் விசாரணைக்காக ஆஜராகியுள்ள நிலையில் வெளியே கூடிய தவெகவினர், கையில் தவெக கொடியை ஏந்தி, TVK, TVK, அண்ணன் யாரு , தளபதி என சிரித்தபடியே கோஷமிட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எங்கு ஆரவாரம் செய்ய வேண்டும், எங்கு அமைதி நிலையை கடைபிடிக்க வேண்டும் என்ற வித்தியாசம் கூட தெரியாமல் இவர்கள் இப்படி கத்திக் கொண்டிருந்தது பார்ப்போரையும் கரூர் சம்பவம் குறித்து விஷயம் தெரிந்திருந்தவர்களையும் அதிர வைத்தது. இவர்களை தற்குறி என அழைத்து வருவதற்கு விஜய் அத்தனை கோபப்பட்டாரே, ஆனால் அவர்களை அப்படி அழைப்பது சரிதான் என்பதை இன்று சிபிஐ அலுவலகத்தின் வெளியே சொல்லாமல் சொல்லிவிட்டனர் தவெகவினர்.












Click it and Unblock the Notifications