குடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்
டெல்லி: குடியரசு தின டிராக்டர் பேரணியில் மிகப் பெரியளவில் வன்முறை ஏற்பட்ட நிலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல்வேறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன

மேலும், விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணியையும் நடத்தினர். அப்போது அதில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக சுமார் 550க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை முடக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு எதிராக தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "இந்த கணக்குகள் அனைத்தும் எங்கள் விதிகளை மீறியுள்ளன. இவர்கள் பதிவிட்ட போலி செய்திகளை உள்ளடக்கிய ட்வீட்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தன" என்று தெரிவித்தார். மேலும், முடக்கப்பட்டுள்ள கணக்குகளில் இருக்கும் சர்ச்சைக்குரிய ட்வீட்களில், அவை போலி தகவல்களைக் கொண்டுள்ளன என்ற குறுஞ்செய்தியும் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 200க்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் மீது 22 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications