உபி சம்பல்: மசூதியில் ஆய்வுக்கு எதிரான போலீசாருடனான வன்முறையில் 2 பேர் பலி- நீடிக்கும் பதற்றம்!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் ஷாஜி ஜமா மசூதியை நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. மசூதி ஆய்வுக்கு எதிராக போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வன்முறை வெடித்ததில் பொதுமக்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நீடிக்கிறது.
உ.பி. சம்பல் ஷாஜி ஜமா மசூதியானது இந்து கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கட்டப்பட்டது; இது தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் என்பது வழக்கு.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்பல் ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு செய்வதற்காக அதிகாரிகள் குழு ஒன்றை அமைத்தும் உத்தரவிட்டது. இந்த குழுவினர் கடந்த 19-ந் தேதி மசூதிக்குள் சென்று ஆய்வு நடத்தியது. அப்போது மசூதி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு அதிகாரிகள் குழு ஒன்று சம்பல் ஷாஜி ஜமா மசூதியை ஆய்வு செய்ய சென்றது. அவர்களுக்கு பாதுகாப்பாக ஏராளமான போலீசாரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால் 300-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் ஒன்று திரண்டு அரசு அதிகாரிகளின் ஆய்வுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் அரசு அதிகாரிகள் மீது கற்களை வீசித் தாக்கினர்; அரசு அதிகாரிகள் வந்த வாகனங்கள், போலீசார் வாகனங்கள் தீ வைத்தும் எரிக்கப்பட்டன.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கலைந்து போகச் செய்ய கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்; இதற்கு பதிலாக பொதுமக்கள் தரப்பில் இருந்து சரமாரியாக போலீசார் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது; டயர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு வீதிகளில் வீசி எறியப்பட்டன. அப்போது நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
இதனையடுத்து அரசு அதிகாரிகள் குழு மசூதிக்குள் சென்று நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஆய்வு நடத்தியது. சம்பல் பகுதியில் நிகழ்ந்த இந்த வன்முறை சம்பவங்களில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications