மோடி சர்காரில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு... ஷாக் ரிப்போர்ட்
டெல்லி: கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மையின் சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
2017-18 ஆம் நிதியாண்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக தேசிய மாதிரி ஆய்வு புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறியிருப்பதாக, இந்தாண்டின் தொடக்கத்தில் செய்திகள் வெளியாகின.
தேர்தல் நேரத்தில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தை கையிலெடுத்து பிரச்சாரம் செய்தனர். ஆனால், வேலைவாய்ப்பின்மை குறித்த எந்த தகவலையும் வெளியிடவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.

வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு
இந்தநிலையில், வெளியிடப்பட்டுள்ள தகவலில், நாட்டில் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை சதவீதம் 6.1 ஆக உயர்ந்துள்ளது. இது நகரங்களில் 7.8 சதவீதமாகவும், கிராமங்களில் 5.3 சதவீதமாகவும் உள்ளது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத, வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு சதவீதம் ஆகும்.

சி.எம்.ஐ.இ ஆய்வறிக்கை
நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி அனைவரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரி மாத நிலவரப்படி 40 கோடியாக உள்ளதாகவும், ஆனால் 2018 பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 40.60 லட்சமாக இருந்ததாகவும் சி.எம்.ஐ.இ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு விளக்கம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அமலாக்கம் உள்ளிட்டவைகளால் 2018ம் ஆண்டில் சுமார் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்திருப்பதாகவும் அந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதேநேரம் பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்ட வேலையிழப்புகள் குறித்த புள்ளிவிவரங்கள் தங்களிடம் இல்லை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பின்மை சதவீதம்
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையில் நடத்திய ஆய்வில் வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக உள்ளது. 1972-1973 நிதியாண்டுக்கு பிறகு இதுவே அதிகம் என்றும் தெரிவித்துள்ளனர். 2011-2012 நிதியாண்டில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை சதவீதம் 2.2 சதவீதமாக இருந்தது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications