Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பட்ஜெட்டில் கவர்ச்சி அறிவிப்புகள் மட்டும் போதாது.. இதையெல்லாம் செய்யனும்! லிஸ்ட் போட்ட நிபுணர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. பட்ஜெட் குறித்து பேசும் நிபுணர்கள், இந்த முறை வெறும் கவர்ச்சி அறிவிப்புகள் மட்டும் கொடுத்தால் போதாது.. உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

நிதித் துறையைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். மூலதனக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், பொறுப்பான கடன் விரிவாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் நிதிச் சேர்க்கையை ஆழப்படுத்துதல் போன்ற கொள்கை நடவடிக்கைகள் மூலம் நிதி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

Union Budget 2026

மூலதனக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல்

வங்கி ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டும் எனில், அந்த நபர் கடனை திருப்பி செலுத்தும் தகுதியுடையவராக இருக்க வேண்டும். அதாவது ஒருவர் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறார் எனில், அவருக்கு ரூ.2 லட்சம் வரை கடன் கொடுக்கலாம். ஊதியம் குறைவாக இருக்கிறது எனில், வங்கிகள் கடன் கொடுக்காது. காரணம் இதற்கு RBI ரூல்ஸ் ஒப்புக்கொள்ளாது. இந்த கட்டுப்பாடுகள், வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களை அதிகமாக கட்டுப்படுத்துகிறது எனவும், இந்த கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இப்படி செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும், புதிய தொழில்கள் தொடங்குவது சாத்தியமாகும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

பொறுப்பான கடன் விரிவாக்கத்தை ஊக்குவித்தல்

பரவலாக கடன் கொடுக்க வேண்டும் என்று கூறும் நிபுணர்கள், தகுதியானவர்களுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். கடனை திருப்பி செலுத்த முடியாத நபர்களுக்கு, காசு கொடுப்பதால்.. அது வாராக்கடனாக மாறும். எனவே இதனை தவிர்க்க, கடன் கொடுப்பதற்கு முன்னர் தீவிர ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இதை செய்வதன் மூலம் பொருளாதாரம் உயரும், வங்கிகளும் கடன் நெருக்கடியில் சிக்காது. இதை மத்திய அரசு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

நிதிச் சேர்க்கையை ஆழப்படுத்துதல்

இதுவரை வங்கி சேவையே சென்று சேராத கடைக்கோடி மக்களுக்கும் சேவையை விரிவுப்படுத்துவதைத்தான், நிதிச் சேர்க்கையை ஆழப்படுத்துதல் என்று சொல்கிறார்கள். வெறுமென வங்கிக்கணக்குகளை மட்டுமே தொடங்குவது முதல்படி. இந்த கணக்கை மக்கள் முழுமையாக பயன்படுத்த வைப்பது என்பது இரண்டாவது கட்டம். இன்சூரன்ஸ், ஓய்வூதிய திட்டம் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை தொடங்குதல் ஆகியவை மூலம் இதனை சாத்தியப்படுத்த முடியும்.

இப்படி செய்வதால் கந்துவட்டி போன்ற நெருக்கடியை தவிர்க்க முடியும். எனவே அரசு பட்ஜெட்டில் இதற்கான செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கோருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+