பட்ஜெட்டில் கவர்ச்சி அறிவிப்புகள் மட்டும் போதாது.. இதையெல்லாம் செய்யனும்! லிஸ்ட் போட்ட நிபுணர்கள்
டெல்லி: தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. பட்ஜெட் குறித்து பேசும் நிபுணர்கள், இந்த முறை வெறும் கவர்ச்சி அறிவிப்புகள் மட்டும் கொடுத்தால் போதாது.. உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
நிதித் துறையைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். மூலதனக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல், பொறுப்பான கடன் விரிவாக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் நிதிச் சேர்க்கையை ஆழப்படுத்துதல் போன்ற கொள்கை நடவடிக்கைகள் மூலம் நிதி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

மூலதனக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல்
வங்கி ஒருவருக்கு கடன் கொடுக்க வேண்டும் எனில், அந்த நபர் கடனை திருப்பி செலுத்தும் தகுதியுடையவராக இருக்க வேண்டும். அதாவது ஒருவர் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் சம்பாதிக்கிறார் எனில், அவருக்கு ரூ.2 லட்சம் வரை கடன் கொடுக்கலாம். ஊதியம் குறைவாக இருக்கிறது எனில், வங்கிகள் கடன் கொடுக்காது. காரணம் இதற்கு RBI ரூல்ஸ் ஒப்புக்கொள்ளாது. இந்த கட்டுப்பாடுகள், வங்கிகள் போன்ற நிதி நிறுவனங்களை அதிகமாக கட்டுப்படுத்துகிறது எனவும், இந்த கட்டுப்பாடுகளை குறைக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இப்படி செய்வதன் மூலம் மக்கள் மத்தியில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என்றும், புதிய தொழில்கள் தொடங்குவது சாத்தியமாகும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
பொறுப்பான கடன் விரிவாக்கத்தை ஊக்குவித்தல்
பரவலாக கடன் கொடுக்க வேண்டும் என்று கூறும் நிபுணர்கள், தகுதியானவர்களுக்கு மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். கடனை திருப்பி செலுத்த முடியாத நபர்களுக்கு, காசு கொடுப்பதால்.. அது வாராக்கடனாக மாறும். எனவே இதனை தவிர்க்க, கடன் கொடுப்பதற்கு முன்னர் தீவிர ஆய்வை மேற்கொள்ள வேண்டும். இதை செய்வதன் மூலம் பொருளாதாரம் உயரும், வங்கிகளும் கடன் நெருக்கடியில் சிக்காது. இதை மத்திய அரசு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
நிதிச் சேர்க்கையை ஆழப்படுத்துதல்
இதுவரை வங்கி சேவையே சென்று சேராத கடைக்கோடி மக்களுக்கும் சேவையை விரிவுப்படுத்துவதைத்தான், நிதிச் சேர்க்கையை ஆழப்படுத்துதல் என்று சொல்கிறார்கள். வெறுமென வங்கிக்கணக்குகளை மட்டுமே தொடங்குவது முதல்படி. இந்த கணக்கை மக்கள் முழுமையாக பயன்படுத்த வைப்பது என்பது இரண்டாவது கட்டம். இன்சூரன்ஸ், ஓய்வூதிய திட்டம் மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை தொடங்குதல் ஆகியவை மூலம் இதனை சாத்தியப்படுத்த முடியும்.
இப்படி செய்வதால் கந்துவட்டி போன்ற நெருக்கடியை தவிர்க்க முடியும். எனவே அரசு பட்ஜெட்டில் இதற்கான செயல் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று நிபுணர்கள் கோருகின்றனர்.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க!












Click it and Unblock the Notifications