ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ்- மத்திய கேபினட் ஒப்புதல்
டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்பட உள்ளது.
மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

அப்போது, 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 78 நாள் ஊதியம் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்து இருப்பதாக கூறினார். மத்திய அரசின் இந்த முடிவு மூலம் 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2,029 கோடி செலவு ஏற்படும். தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகைக்கு கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த தொகை ரயில்வேயில் பணியாற்றும் பல்வேறு தரப்பு ஊழியர்களுக்கும் கிடைக்கும். அதாவது, ரயில்வே டிராக் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்கள், டிரெயின் மேனேஜர்ஸ், ஸ்டேஷன் மாஸ்டர்ஸ், சூப்பர்வைசர்ஸ், டெக்னிஷியன்ஸ், டெக்னிஷியன்ஸ் ஹெல்பர்ஸ், பாயின்ட்ஸ்மேன், அமைச்சரவை ஊழியர்கள் மற்றும் பிற குரூப் XC ஊழியர்களுக்கும் இந்த போனஸ் கிடைக்கும்.
ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி மத்திய அமைச்சரவை இந்த தொகையை (PLB) வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.17,951 வரை 78 நாட்கள் ஊதியமாக வழங்கப்படும். கடந்த ஆண்டும் 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்பட்டது. 6-வது ஊதிய கமிஷன்படி, குரூப் 4 ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இதை 78 நாட்கள் ஊதியமாக கணக்கிட்டால் ரூ.18 ஆயிரம் வரை கிடைக்கும். கடந்த 2022 ஆம் ஆண்டும் தீபாவளி போனசாக 78 நாட்கள் ஊதியமே அளிக்கப்பட்டது. அப்போது சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் போனஸால் பயன் அடைந்தனர். அரசு ரூ.1,832 கோடியை அந்த ஆண்டு ஒதுக்கியது.
போனஸ் தொடர்பான அறிவிப்பு மட்டும் இன்றி ரயில்வேயில் 58 ஆயிரத்து 642 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ரயில்வேயில் 58,642 இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான எண்ணிக்கையை வெளியிட்டு எதிர்க்கட்சிகள் மக்களை குழப்ப நினைக்கின்றன. அதனால், இந்த எண்ணிக்கையை நான் வெளியிட்டுள்ளேன்" என்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications