Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரயில்வே ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 78 நாட்கள் ஊதியம் தீபாவளி போனஸ்- மத்திய கேபினட் ஒப்புதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்பட உள்ளது.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.

diwali bonus railway union cabinet

அப்போது, 11.72 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 78 நாள் ஊதியம் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்து இருப்பதாக கூறினார். மத்திய அரசின் இந்த முடிவு மூலம் 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள். 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்குவதன் மூலம் மத்திய அரசுக்கு கூடுதலாக ரூ.2,029 கோடி செலவு ஏற்படும். தீபாவளி பண்டிகை வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் தொகைக்கு கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய கேபினட் ஒப்புதல் அளித்து இருக்கும் இந்த தொகை ரயில்வேயில் பணியாற்றும் பல்வேறு தரப்பு ஊழியர்களுக்கும் கிடைக்கும். அதாவது, ரயில்வே டிராக் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்கள், டிரெயின் மேனேஜர்ஸ், ஸ்டேஷன் மாஸ்டர்ஸ், சூப்பர்வைசர்ஸ், டெக்னிஷியன்ஸ், டெக்னிஷியன்ஸ் ஹெல்பர்ஸ், பாயின்ட்ஸ்மேன், அமைச்சரவை ஊழியர்கள் மற்றும் பிற குரூப் XC ஊழியர்களுக்கும் இந்த போனஸ் கிடைக்கும்.

ரயில்வே ஊழியர்களின் சிறப்பான செயல்திறனை பாராட்டி மத்திய அமைச்சரவை இந்த தொகையை (PLB) வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக ரூ.17,951 வரை 78 நாட்கள் ஊதியமாக வழங்கப்படும். கடந்த ஆண்டும் 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்பட்டது. 6-வது ஊதிய கமிஷன்படி, குரூப் 4 ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளமாக ரூ.7 ஆயிரம் வழங்கப்படுகிறது.

இதை 78 நாட்கள் ஊதியமாக கணக்கிட்டால் ரூ.18 ஆயிரம் வரை கிடைக்கும். கடந்த 2022 ஆம் ஆண்டும் தீபாவளி போனசாக 78 நாட்கள் ஊதியமே அளிக்கப்பட்டது. அப்போது சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் போனஸால் பயன் அடைந்தனர். அரசு ரூ.1,832 கோடியை அந்த ஆண்டு ஒதுக்கியது.

போனஸ் தொடர்பான அறிவிப்பு மட்டும் இன்றி ரயில்வேயில் 58 ஆயிரத்து 642 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "ரயில்வேயில் 58,642 இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைந்த அளவிலான எண்ணிக்கையை வெளியிட்டு எதிர்க்கட்சிகள் மக்களை குழப்ப நினைக்கின்றன. அதனால், இந்த எண்ணிக்கையை நான் வெளியிட்டுள்ளேன்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+