பிஎஸ்என்எல்லுக்கு புத்துயிர் கிடைக்குமா.. ரூ.1.64 லட்சம் கோடி ஒதுக்கீடு!
டெல்லி: பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் போட்டியின்றி வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இந்த நிலையில் தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க மத்திய அரசு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ரூ.1.64 லட்சம் கோடி
பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்தவும், சேவைகளை விரிவுப்படுத்தவும் ரூ.1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், மத்திய அமைச்சரவை ஒதுக்கியுள்ள ரூ.1.64 லட்சம் கோடி நிதி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர் ரீச் விரிவாக்கம் மற்றும்ம் சேவைகளின் தரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

4ஜி சேவை
இந்த நிதியில் ஸ்பெக்ட்ரம், மூலதன முதலீடு ஆகியவற்றுக்காக ரூ.44 ஆயிரம் கோடியும், மீதமுள்ள ரு.1.20 லட்சம் கோடி பிஎஸ்என்எல் சேவை மேம்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்த நிதி நான்கு வருடங்களுக்கு பிரித்து வழங்கப்படும். இதன்மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவைக்கான அனுமதி வழங்கப்படுவதோடு, அடுத்த இரண்டு வருடங்களுக்குள் வளர்ச்சி அனைவருக்கும் தெரியும்.

வேலைவாய்ப்பு
மத்திய அரசின் இந்த மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் 2026-27 நிதியாண்டில் பிஎஸ்என்எல் லாபகர நிறுவனம் மாறும். அதேபோல் நாட்டில் வரி செலுத்துவோரின் பணம் பிஎஸ்என்எல் மறுமலர்ச்சி திட்டத்திற்கு செலவழிக்கப்படுகிறது. இதன்மூலம் அடுத்த சில ஆண்டுகளில் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் - பிபிஎன்எல் இணைப்பு
அதேபோல் பிபிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களை இணைக்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பிஎஸ்என்எல் 6.83 லட்சம் கி.மீ அதிகமான ஆப்டிகல் ஃபைபர் கேபிள் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. இந்த இரண்டையும் இணைத்த பின்னர், 5.67 லட்சம் கி.மீ ஆப்டிகல் ஃபைபர் வசதிபெறும் நிறுவனமாக பிஎஸ்என்எல் மாறும். இந்த ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் நாட்டிலுள்ள 1.85 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் யுனிவர்சல் சர்வீஸ் ஒப்லிகேஷன் ஃபண்ட் மூலம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications