அகவிலைப்படி 3% உயர்வு.. தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு வந்த குட்நியூஸ்!
டெல்லி: தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இன்று 3 சதவீதம் வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி என்பது 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களக்கு டிஏ என கூறப்படும் அகவிலைப்படி என்பது வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும்.

அதாவது அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின் 12 மாத சராசரி சதவீதத்தின் அடிப்படையில் பணவீக்கத்தை பொருத்து அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் ஒவ்வொரு 6 மாதத்துக்கும் ஒருமுறை அகவிலைப்படி என்பது உயர்த்தி வழங்கப்பட வேண்டும்.
அதன்படி ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் என்பது மார்ச் மற்றும் செப்டம்பர் மாதம் வரை தாமதம் செய்யப்பட்டு அதன்பிறகு முன்தேதியிட்டு வழங்கப்படும்.
இந்நிலையில் தான் தீபாவளியையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அரசு இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி உள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு அகவிலைப்படி என்பது 50 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இப்போது 3 சதவீதம் உயர்த்தப்பட்டு இருப்பதன் மூலம் மொத்த அகவிலைப்படி என்பது 50 சதவீதத்தில் இருந்து 53 என்று அதிகரித்துள்ளது.
இதன்மூலம் நாடு முழுவதும் 49.18 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என்று மொத்தம் 1 கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைய உள்ளனர். இந்த மாத இறுதியில் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி உள்ளதன் மூலம் மோடியின் அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தியை வழங்கி உள்ளது.
இருப்பினும் கூட மத்திய அரசு ஊழியர்கள் மத்திய அரசிடம் இருந்து இன்னொரு அறிவிப்பை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன். அதாவது ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்துக்கான அரியர்ஸ் தொகை பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை. அந்த அரியர்ஸ் தொகை அறிவிப்பையும் மத்திய அரசு விரைவில் வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து அரியர்ஸ் பற்றிய அறிவிப்பை மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications