100 நாள் வேலை திட்டத்தின் பெயர் மாறுகிறது.. என்ன தெரியுமா? மத்திய அரசு கொண்டு வரும் புதிய மசோதா..
டெல்லி: MNREGA எனும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கிராமத்தில் வேலையில்லாதவர்களின் நலனை கருத்தில் கொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. இந்நிலையில் தான் தற்போது மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
நாடு முழுவதும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது மத்திய அரசின் திட்டமாகும். கிராமப்பகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்குவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தின்படி தற்போது கிராமத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் பலனடைந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு 100 நாட்கள் இந்த திட்டத்தில் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வருகின்றனர்.
பஞ்சாயத்து அளவில் குளம், கால்வாய் உள்பட நீர்நிலைகளை ஆழப்படுத்துவது உள்பட, சாலை விரிவாக்க பணிக்கு உதவுவது என வேலைகள செய் வருகின்றனர். இந்த திட்டத்தை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. மறைந்த மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது கொண்டு வந்தார். இந்த திட்டத்தை ஆங்கிலத்தில் சுருக்கமாக MNREGA (Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme) என்பார்கள்.
இந்த திட்டத்துக்கு முதலில் வைத்த பெயர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்பதாகும். அதன்பிறகு 2009 ம் ஆண்டில் தான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 154 மில்லியன் மக்கள் (அதாவது 15.4 கோடி பேர்) பயனடைந்து வருகின்றனர். இதில் 3ல் ஒருவர் பெண்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் இந்த திட்டத்தில் வேலையுடன் சம்பளம் கிடைக்கிறது.
இந்நிலையில் தான் நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு விஷயங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதில் முக்கியமான ஒன்று தான் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றுவது. தற்போது உள்ள இந்த பெயரை ‛பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கார் யோஜனா' என பெயர் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
இதற்கான மசோதா நடப்பு குளர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வரும் நிலையில் புதிய மசோதாவின் மூலம் ஆண்டுக்கு வழங்கப்படும் வேலை நாட்களின் எண்ணிக்கையை 125 அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்வதற்கான பணியை மத்திய அரசு தொடங்கி உள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications