இனி பாகிஸ்தான் சீண்டினால் அவ்வளவுதான்.. புதிதாக களமிறங்கும் 97 தேஜஸ் போர் விமானங்கள்.. செம
டெல்லி: இந்திய விமானப்படைக்கு ரூ.62370 கோடிக்கு புதிதாக 97 தேஜஸ் மார்க் -1ஏ (Tejas Mark-1A)போர் விமானங்கள் வாங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்(எச்ஏஎல்) நிறுவனத்துடன் இன்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் நிலையில் தேஜஸ் மார்க் -1ஏ போர் விமானத்தின் பின்னணி குறித்த சூப்பரான தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய விமானப்படையில் இருந்து நாளை மிக்-21 (MiG -21) போர் விமானங்களின் படைப்பிரிவுகள் ஓய்வு பெற உள்ளன. இதனால் புதிய போர் விானங்கள் விமானப்படைக்கு தேவையாக உள்ளன.

இந்நிலையில் தான் எச்ஏஎல் எனும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு துறை இன்று முக்கிய ஒப்பந்தம் செய்தது.
எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 97 தேஜஸ் மார்க் -1ஏ ரக போர் விமானங்களை வாங்கும் வகையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.62,370 கோடியாகும். இதற்கான ஒப்பந்தம் இன்று அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் மற்றும் எச்ஏஎல் நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி 68 விமானங்கள் ஒற்றை இருக்கை (Single Seat fighter jet) கொண்டதாக இருக்கும். 29 போர் விமானங்கள் இரு இருக்கை கொண்ட பயிற்சி போர் விமானங்களாக (Twin Seat Trainers) இருக்கும். இந்த விமானங்கள் 2027-2028 நிதியாண்டில் டெலிவரியை தொடங்கும். அதன்பிறகு 6 ஆண்டுகளில் முழுவதுமாக 97 தேஜஸ் போர் விமானங்களும் விமானப்படைக்கு கிடைத்து விடும்.
இந்த போர் விமானங்கள் உள்நாட்டு தயாரிப்பாகும். அதோடு விமானத்தின் உதிரி பாகங்களில் 67 சதவீதம் இந்தியாவில் இருந்தே பயன்படுத்தப்படுகிறது. இந்த உதிரி பாகங்கள் 105 நிறுவனங்களிடம் இருந்து வாங்கப்பட உள்ளது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டுக்கு 11,750 பேருக்கு வேலை கிடைக்க உள்ளது. புதிதாக UTTAM AESA radar, தி ஸ்வயம் ரக்சா கவாச் எலக்ட்ரானிக் வார்பேர் சூட் மற்றும் indigenously developed control surface actuators இடம்பெற உள்ளது.
முன்னதாக கடந்த 2021ம் ஆண்டில் 83 தேஜஸ் எம்கே 1ஏ போர் விமானங்கள் வாங்க கையெழுத்தானது. ஆனால் இந்த விமானங்கள் டெலிவரியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் தேஜஸ் மார்க் 1ஏ போர் விமானங்களில் தாமதம் கூடாது என்று மத்திய அரசு உறுதியாக எச்ஏஎல் நிறுவனத்திடம் கூறியுள்ளது.
தற்போது நம் நாட்டை பாகிஸ்தான் தொடர்ந்து சீண்டி வருகிறது. மேலும் பாகிஸ்தானும், சவுதி அரேபியாவும் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளன. இது நம் நாட்டுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. மேலம் நம் நாட்டின் விமானப்படையில் இருந்து மிக் 21 ரக போர் விமானங்கள் ஓய்வு பெற உள்ளன. இப்படியான சூழலில் இந்த ஒப்பந்தம் என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதோடு பாகிஸ்தான் நம்மை சீண்டினால் உரிய முறையில் தக்க பதிலடியை கொடுக்க இந்த விமானங்கள் கைக்கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications