Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி GPSஐ நினைத்தாலும் ஆஃப் செய்ய முடியாது! மத்திய அரசின் கட்டாய விதி! போன்களுக்கு வரும் கட்டுப்பாடு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் தொடர்ந்து இயங்கும் (GPS) இருப்பிடக் கண்காணிப்பை கட்டாயமாக்குவது குறித்து அரசு தற்போது பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சஞ்சார் சாதி செயலி தொடர்பான சர்ச்சை முடிவிற்கு வந்துள்ள நிலையில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்த நகர்வுக்கு, பயனர்களின் தனியுரிமைகளை முன்வைத்து Apple, Samsung, Google போன்ற முன்னணி நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தொலைத்தொடர்புத் துறையின் இந்த முன்மொழிவு குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. பல ஆண்டுகளாகவே, புலன் விசாரணைகளின் போது தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் சட்டப்பூர்வ கோரிக்கைகள் விடுக்கப்படும்போது அதன் முகமைகளுக்கு துல்லியமான இருப்பிடத் தகவல்கள் கிடைப்பதில்லை என மத்திய அரசு கவலை கொண்டுள்ளளது. அதாவது குற்றவாளிகள் ஜிபிஎஸ் தகவல்களை ஆப் செய்து வைத்து இருப்பதால் சில சமயங்களில் துல்லியமாக சிலரை டிராக் செய்ய முடிவது இல்லை.

GPS

ஜிபிஎஸ் துல்லியம்

தற்போதுள்ள அமைப்பில், செல்லுலார் டவர் தரவுகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன, இது பல மீட்டர் தொலைவில் உள்ள தோராயமான இருப்பிடப் பகுதியையே வழங்க முடியும் ஜிபிஎஸ் மட்டுமே துல்லியமான தகவல்களை வழங்கும்.

ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல்லைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கம் (COAI) கடந்த ஜூன் மாதத்தில் மத்திய IT அமைச்சகத்திற்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியது. இதன்படி, செயற்கைக்கோள் சமிக்ஞைகள் மற்றும் செல்லுலார் தரவுகளைப் பயன்படுத்தும் A-GPS (அசிஸ்டட்-குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்) தொழில்நுட்பத்தை செயல்படுத்த அரசாங்கம் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டால் மட்டுமே துல்லியமான பயனர் இருப்பிடத் தகவல்கள் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தது.

இந்த முன்மொழிவு, ஸ்மார்ட்போன்களில் இருப்பிடச் சேவைகளை எப்போதும் இயக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்றும், அதை பயனர்கள் முடக்கும் விருப்பம் இருக்கக்கூடாது என்றும் வலியுறுத்துகிறது. அதாவது நீங்கள் நினைத்தாலும் GPS ஐ ஆப் செய்ய முடியாது. ஆனால் , Apple மற்றும் Alphabet-இன் Google நிறுவனங்கள் இந்த கட்டாயமாக்கலை ஏற்க முடியாது என்று இந்திய அரசுக்குத் தெரிவித்துள்ளன.

கடுமையான எதிர்ப்பு

Apple மற்றும் Google ஆகிய இரு நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தியா செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சங்கம் (ICEA), கடந்த ஜூலை மாதம் அரசுக்கு ஒரு ரகசிய கடிதத்தை அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், சாதன அளவில் இருப்பிட கண்காணிப்பை மேற்கொள்ள உலகிலேயே எந்த முன்னுதாரணமும் இல்லை என்று குறிப்பிட்டது. மேலும், "A-GPS பிணைய சேவை... இருப்பிட கண்காணிப்பிற்காக பயன்படுத்தப்படுவதில்லை அல்லது ஆதரவளிக்கப்படுவதில்லை," என்று சுட்டிக்காட்டியதுடன், இத்தகைய நடவடிக்கை விதிமுறை மீறலாக இருக்கும் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

பொதுவாக குறிப்பிட்ட பயன்பாடுகள் இயங்கும்போதோ அல்லது அவசரகால அழைப்புகள் மேற்கொள்ளப்படும்போதோ மட்டுமே வழக்கமாக செயல்படும் A-GPS தொழில்நுட்பம், பயனர்களை சுமார் ஒரு மீட்டர் துல்லியத்துடன் கண்காணிக்க அதிகாரிகளுக்கு உதவும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

2025 மத்தியப் பகுதி நிலவரப்படி, 73.5 கோடி ஸ்மார்ட்போன் பயனர்களுடன், உலகின் இரண்டாவது பெரிய மொபைல் சந்தையாக இந்தியா உள்ளது. இங்கு Google-இன் ஆண்ட்ராய்டு 95% க்கும் அதிகமான சாதனங்களில் இயங்குகிறது, மீதமுள்ளவை Apple-ன் iOS-ஐப் பயன்படுத்துகின்றன.

Apple மற்றும் Google-இன் லாபி குழுவான ICEA, தனது ஜூலை மாத கடிதத்தில், மத்திய அரசின் இந்த முன்மொழிவால் "சட்டரீதியான, தனியுரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு கவலைகள்" எழும் என வாதிட்டுள்ளது. முக்கிய தகவல்களைக் கையாளும் ராணுவம், நீதிபதிகள், கார்ப்பரேட் நிர்வாகிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் போன்றோரின் பாதுகாப்புக்கு இந்த இருப்பிடக் கண்காணிப்பு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+