சிஏஏ சட்ட விதிகளை வகுக்கும் பணி தீவிரம்.. மீண்டும் காலஅவகாசம் கோரிய மத்திய உள்துறை அமைச்சகம்
டெல்லி: சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்ட விதிகளை வகுக்க கூடுதல் காலஅவகாசம் வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்துக்கு கடிதம் எழுதி உள்ளது.
இந்தியாவில் சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா கடந்த 2019 டிசம்பர் மாதம் 11ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, அதே ஆண்டு டிசம்பர் 12ம் தேதி ஜனாதிபதி ஒப்புதல் அளித்த நிலையில் சட்டமானது. இந்த சட்டம் முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இந்தியாவின் அண்டை நாடுகளாக பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து துன்புறுத்தப்படும் சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழிவகுக்கிறது.
இன்னும் புரியும் படி கூற வேண்டும் என்றால் 2014 டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர், ஜைனர்கள், பார்சி, கிறிஸ்தவ மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யும். இவர்கள் அந்த நாடுகளில் இருந்து இந்தியா வந்த பிறகு 6 ஆண்டுகளில் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்ய முடியும்.
இதில் முஸ்லிம் மக்கள் பற்றி எந்த விபரமும் இடம்பெறவில்லை. இதனால் சிஏஏ சட்டம் என்பது சர்ச்சையை கிளப்பியது. இஸ்லாமிய அமைப்புகள் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களில் நடந்த போராட்டங்களில் 80க்கும் அதிகமானவர்கள் இறந்தனர்.

இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இதற்கிடையே தான் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விதிகளை வகுத்து வருகிறது. இந்த விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் வகுக்கிறது. இந்த விதிகளை வகுக்க 7 முறை தொடர்ந்து காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் விதிகளை வகுப்பதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 8 வது முறையாக காலஅவகாசத்தை நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நாடாளுமன்ற லோக்சபா துணை சட்ட குழுவுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் 8 வது முறையாக குடியுரிமை திருத்த சட்டத்துக்கான விதிகளை வகுக்க காலஅவகாசம் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications