முழு உடல் பரிசோதனை முடிந்தது.. எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ்!
டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். மிக லேசான அறிகுறி இருந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் கொரோனா உறுதியானது. தொற்று உறுதியானதையடுத்து மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அதன்பின் அமித் ஷா ஆகஸ்ட் 14 ஆம் தேதி குணம் அடைந்தார். கொரோனாவிலிருந்து குணமடைந்த நிலையில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனால் அதன்பின் மீண்டும் கொரோனாவிற்கு பின்பான சிகிச்சை பெற அமித் ஷா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மூச்சு விடுவதில் சிரமம் இருந்த நிலையில் மீண்டும் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . தொடர்ந்து 18 நாட்கள் கொரோனாவிற்கு பின்பான சிகிச்சை எடுத்துக் கொண்டு ஆகஸ்ட் 18ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆனாலும் இவருக்கு மூச்சு விடுவதில் தொடர்ந்து சிரமம் நிலவியது.
இதனால் கடந்த வாரம் அமித் ஷா மீண்டும் டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். முழு உடல் பரிசோதனைக்காக இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முழுமையான உடல் பரிசோதனை முடிந்த நிலையில் இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications