‛ஜெய் சியா ராம்’.. ரிஷி சுனக்கை வரவேற்றபோது மத்திய அமைச்சர் சொன்ன வார்த்தை இதுதான்! ஏன் தெரியுமா?
டெல்லி: ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்திறங்கிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை வரவேற்றபோது மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவ்பே கூறிய வார்த்தையும், அவர் அளித்த பிரதிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
டெல்லியில் ஜி20 மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று, நாளை என 2 நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது. இதற்காக நேற்று முதல் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாட்டு தலைவர்கள், அந்தந்த நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியா வந்தனர்.

குறிப்பாக கூற வேண்டும் என்றால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், தென்னாப்பிரிக்கா அதிபர் சிறில் ரமாபோசா உள்பட ஏராளமான தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த தலைவர்கள் அனைவரும் நேற்று இந்தியா வந்தனர். அவர்கள் டெல்லி விமான நிலையத்தில் விமானத்தில் வந்திறங்கினர். ஒவ்வொரு தலைவர்களையும் நேரில் சென்று மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர். இந்நிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்சதா மூர்த்தியுடன் டெல்லி வந்தார். டெல்லி பாலம் விமான நிலையத்தில் ரிஷி சுனக் வந்தார்.
ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவியை மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே வரவேற்றார். ரிஷி சுனக்கை அவர் ‛‛ஜெய் சியா ராம்'' எனக்கூறி வரவேற்றார். அதோடு அவர் ரிஷி சுனக் மற்றும் அவரது மனைவிக்கு பகவத்கீதை மற்றும் ஹனுமான் சாலிசாவின் பிரதிகளை வழங்கினார். அதனை ரிஷி சுனக் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார்.
இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் இந்தியாவை சேர்ந்த அக்சதா மூர்த்தியை திருமணம் செய்துள்ளார். இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான நாராயணமூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியின் மகள் ஆவார். இவர்களின் திருமணம் என்பது பெங்களூரில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரிட்டன் பிரதமராக இருந்தாலும் கூட ரிஷி சுனக் தான் ஒரு இந்து. கோவில்களுக்கு அடிக்கடி செல்வதாகவும், கஷ்டமான காலங்களில் பகவத் கீதை வாசிப்பதாகவும் பலமுறை தெரிவித்துள்ளார். இத்தகைய சூழலில் தான் மத்திய அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே ரிஷி சுனக்கை, ‛ஜெய் சியா ராம்' என்ற வார்த்தையை பயன்படுத்தி வரவேற்று பகவத் கீதை, ஹனுமான் சாலிசாவுக்கான பிரதிகளை வழங்கினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications