நடுவானில் விமானத்தில் மயங்கி விழுந்த பயணி.. சட்டென உதவிய மத்திய இணை அமைச்சர்.. நெகிழ்ச்சி சம்பவம்
டெல்லி: டெல்லியில் இருந்து மும்பை சென்ற விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவருக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.
மத்திய நிதி இணை அமைச்சர் பாகவத் கராட் டெல்லியி இருந்து மும்பைக்கு விமானத்தில் பயணம் செய்தபோது இந்த நிகழ்வு நடந்துள்ளது. மத்திய இணை அமைச்சர் மருத்துவர் என்பதால் உடனடியாக பயணிக்கு முதலுதவி செய்து காப்பாற்றினார்.

பயணி மயக்கம்
கடந்த செவ்வாயன்று மத்திய நிதித்துறை இணை அமைச்சரான பாகவத் கராட் தலைநகர் டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் சென்ற இன்டிகோ விமானத்தில் ஏராளமான பயணிகளும் சென்று கொண்டிருந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் ஒரு பயணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அந்தப் பயணிக்கு முதலுதவி அளிக்க விமானப் பணிப்பெண்களும், ஊழியர்களும் முன்வந்தனர்.

விமானத்தை திருப்பி விடலாமா?
ஆனால் திடீரென மயங்கி விழுந்த பயணிக்கு என்னவிதமான முதலுதவி தருவது என தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர். ஒரு சிலர் அவருக்கு தேவைப்படுவது அவசர சிகிச்சையாகக் கூட இருக்கலாம் மீண்டும் விமானத்தை டெல்லிக்கே திருப்பச் சொல்லலாமா என ஆலோசனைக் கூறினர்.

பயணியை பரிசோதித்த அமைச்சர்
இதை அறிந்து மத்திய இணையமைச்சர் பாகவத் கராட் நேராக சென்று பயணியின் கையை பிடித்து நாடித்துடிப்பை பரிசோதித்தார். மேலும் அவரது உடல்நிலையை பரிசோதனை செய்து ரத்த அழுத்த பிரச்சனையால்தான் அவர் மயக்க நிலைக்கு சென்றதாக கூறினார். பின்னர் அந்த பயணிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின் சிறிது நேரத்தில் அவர் கண்விழித்தார்.

சக பயணிகள் நிம்மதி
இதனால் சக பயணிகளும், விமான ஊழியர்களும் நிம்மதி அடைந்தனர். பின்னர் தனக்கு ரத்த அழுத்தம் இருப்பதாகவும் அவசர நேரத்தில் உதவி அளித்த மத்திய இணையமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்தப் பயணி கண்ணீர் மல்க கூறினார். சக பயணிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் பாகவத் கராட் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர், விமான நிறுவனம் பாராட்டு
அமைச்சரின் இந்த செயலை தெரிந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியும் பாராட்டி டிவிட் செய்துள்ளார். "அமைச்சரின் இந்த செயல் எப்போதும் என் நினைவில் இருக்கும் " என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இதேபோல இன்டிகோ விமான நிறுவனமும் அமைச்சரின்செயலுக்கு மனமார்ந்த நன்றியும் மனப்பூர்வமான பாராட்டுகளும் தெரிவிப்பதாகவும், அமைச்சரின் இந்த சேவை தங்களை ஊக்கப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications