இலங்கையில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்- உற்சாக வரவேற்பு- தமிழ் தலைவர்களுடன் இன்று முக்கிய பேச்சு!
டெல்லி: இலங்கைக்கு 2 நாட்கள் பயணமாக சென்றுள்ள மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இன்று ஈழத் தமிழர் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இலங்கை, மாலத்தீவு நாடுகளுக்கு 4 நாட்கள் பயணத்தை மேற்கொண்டுள்ளார் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர். மாலத்தீவுகளுக்கான பயணத்தை நிறைவு செய்துவிட்டு நேற்று இலங்கை சென்றடைந்த மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இலங்கை அமைச்சர்கள் கொழும்பு விமான நிலையத்தில் அமைச்சர் ஜெய்சங்கரை வரவேற்றனர். பின்னர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

இச்சந்திப்பு தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஏனைய அமைச்சர்களுடன் கொழும்பில் திருப்திகரமான ஒருசந்திப்பு இடம்பெற்றது.இச்சந்திப்பில் உட்கட்டமைப்பு,தொடர்புகள், எரிசக்தி,தொழில்துறை மற்றும் சுகாதாரம் போன்றவிடயங்களில் இந்தியா-இலங்கை இடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கையின் பொருளாதார மீட்சியினை துரிதமாக்கும் நோக்குடன் இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பதில் எமது அர்ப்பணிப்பு குறித்தும் இச்சந்திப்பின்போது எடுத்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவையும் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசுகிறார். இதன்பின்னர் ஈழத் தமிழர்களின் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் கொழும்பில் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச உள்ளார். இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை கொண்டிருக்கும் நிலையில் அமைச்சர் ஜெய்சங்கரின் பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications