‛‛வேணாமடா’’.. கேள்வி கேட்ட நிருபர்கள்! திரும்பாமல் தெறித்து ஓடிய மத்திய பெண் அமைச்சர்.. ஒரே பரபரப்பு
டெல்லி: மல்யுத்த வீராங்கணைகள் போராட்டம் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்ட நிலையில் மத்திய பெண் அமைச்சர் திரும்பி கூட பாராமல் தெறித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராகவும், பாஜக எம்பியாகவும் இருப்பவர் பிரிஜ் பூஷண் சரண் சிங். இவர் மல்யுத்த வீராங்கணைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து அவர் மீது போக்சோ உள்பட 2 வழக்குகளை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்தாலும் கூட பிரிஜ் பூஷண் சரண் சிங் கைது செய்யப்படவில்லை. இதனால் அவரை கைது செய்யக்கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் அதிகமாக தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது. இந்த போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியது.
அதாவது கடந்த 28 ம் தேதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது நியாயம் கேட்டு மல்யுத்த வீரர், வீராங்கணைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து பேரணியாக புறப்பட்டனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு தரதரவென இழுத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது பெரிய அளவில் சர்ச்சையானது.
இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், டெல்லி மகளிர் ஆணையம், உலக மல்யுத்த கூட்டமைப்பு உள்ளிட்டவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் தங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை எனக்கூறி நாட்டுக்காக வென்ற பதக்கங்களை அவர்கள் நேற்று கதறி அழுது கங்கை ஆற்றில் வீச முயன்றனர். இறுதியாக விவசாய சங்க தலைவர் நரேஷ் தியாகத் பேசி அந்த போராட்டத்தை கைவிட வைத்தார்.
இதற்கிடையே தான் மல்யுத்த வீராங்கணைகளின் போராட்டம் குறித்து மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகியிடம் கேள்வி கேட்க நேற்று பத்திரிகையாளர்கள் முயன்றனர். அப்போது அந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த மீனாட்சி லேகி அவர்களிடம் இருந்து விலகி சென்றார். இருப்பினும் பத்திரிகையாளர்கள் அவரை பின்தொடர்ந்து கேள்விகள் எழுப்பினர். இந்த வேளையில் பதில் அளிக்காமல் அவர் ஓட்டம் பிடித்தார்.

பத்திரிகையாளர்களுக்கு பதில் சொல்லாமல் அவர் தனது கார் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தை நோக்கி வேகமாக ஓடினார். அவருடன் பாதுகாவலர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் ஓடினர். இறுதியாக அவர் ‛சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' எனக்கூறிவிட்டு வேகமாக காரில் ஏறி சென்றார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மீனாட்சி லேகி பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரைவயில் வெளியுறவுத்துறை மற்றும் கலாசார துறையின் இணையமைச்சராக செயல்பட்டு வருகிறார். இவர் டெல்லி நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக உள்ளார். அடிப்படையில் வழக்கறிஞரான இவர் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டு மத்திய இணையமைச்சராகி உள்ளார். முன்னதாக அவர் பாஜகவின் தேசிய மகளிரணி துணை தலைவியாகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications