செப்.21 முதல்.. 9-12ம் வகுப்பு மாணவர்கள்.. விருப்பம் இருந்தால் பள்ளிகளுக்கு செல்லலாம்.. மத்திய அரசு!
டெல்லி: செப்டம்பர் 21ம் தேதி முதல் 9-12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பெயரில் பள்ளிக்கூடம் செல்ல விரும்பினால் செல்லலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே இருக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.
அன்லாக் 4.0 செயல்முறையில் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு இப்படி தடைகள் விதிக்கப்பட்டாலும் கூட, சில முக்கியமான தளர்வுகள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் மட்டுமே மாணவர்கள் கல்வி பயிலலாம். கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் செப்டம்பர் 21ம் தேதி முதல் செல்லலாம். ஆன்லைன் வகுப்புகளை நடத்த வசதியாக ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லலாம்.
9-12ம் வகுப்பு மாணவர்கள் செப்டம்பர் 21ம் தேதி முதல் தங்கள் சொந்த விருப்பத்தின் பெயரின் பள்ளிகளுக்கு செல்லலாம். கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியில் மட்டுமே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் பெற்றோர்களின் அனுமதி கடித்ததோடு மட்டுமே இவர்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21ம் தேதி முதல் தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் பயிற்சி வகுப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முறையான ஆய்வுகள், மத்திய அரசுடனான ஆலோசனைக்கு பிறகு பிஜி மேற்படிப்புகள் மற்றும் பிஎச்டி படிப்புகளுக்கான வகுப்புகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications