செப்.21 முதல்.. 9-12ம் வகுப்பு மாணவர்கள்.. விருப்பம் இருந்தால் பள்ளிகளுக்கு செல்லலாம்.. மத்திய அரசு!
டெல்லி: செப்டம்பர் 21ம் தேதி முதல் 9-12ம் வகுப்பு மாணவர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பெயரில் பள்ளிக்கூடம் செல்ல விரும்பினால் செல்லலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே இருக்கும் பள்ளிகளுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும்.
அன்லாக் 4.0 செயல்முறையில் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பள்ளி, கல்வி நிறுவனங்களுக்கு இப்படி தடைகள் விதிக்கப்பட்டாலும் கூட, சில முக்கியமான தளர்வுகள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் முறையில் மட்டுமே மாணவர்கள் கல்வி பயிலலாம். கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள் செப்டம்பர் 21ம் தேதி முதல் செல்லலாம். ஆன்லைன் வகுப்புகளை நடத்த வசதியாக ஆசிரியர்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லலாம்.
9-12ம் வகுப்பு மாணவர்கள் செப்டம்பர் 21ம் தேதி முதல் தங்கள் சொந்த விருப்பத்தின் பெயரின் பள்ளிகளுக்கு செல்லலாம். கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியில் மட்டுமே இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் பெற்றோர்களின் அனுமதி கடித்ததோடு மட்டுமே இவர்கள் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 21ம் தேதி முதல் தேசிய திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மத்திய அரசு வழங்கும் பயிற்சி வகுப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சூழ்நிலையை கருத்தில் கொண்டு, முறையான ஆய்வுகள், மத்திய அரசுடனான ஆலோசனைக்கு பிறகு பிஜி மேற்படிப்புகள் மற்றும் பிஎச்டி படிப்புகளுக்கான வகுப்புகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications