Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாய்க்குள் நாக்கை நுழைத்தார்.. மத்திய அமைச்சர் அக்பர் மீது சிஎன்என் பெண் நிருபர் பகீர் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மத்திய அமைச்சர் மீது 10 பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்- வீடியோ

    டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பருக்கு எதிராக பாலியல் புகார்கள் பெருக்கெடுத்து வரும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் பத்திரிக்கையாளரும் இப்போது, அவர் மீது புகார் தெரிவித்துள்ளார்.

    சிஎன்என் தொலைக்காட்சியின் பெண் பத்திரிக்கையாளர் மஜ்லியே புவே கம்ப் என்பவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

    2007ம் ஆ ண்டு, 18 வயதாக இருக்கும் போது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஏசியன் ஏஜ் என்ற பத்திரிக்கையில் இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருந்தார் மஜ்லியே.

    அமெரிக்க பெண்

    அமெரிக்க பெண்

    அந்த காலகட்டத்தில் 'ஏசியன் ஏஜ்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் எம்.ஜே.அக்பர். அப்போதுதான் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஹப்போஸ்ட் இந்தியா என்ற ஊடகத்திற்கு அந்த பெண் பத்திரிக்கையாளர் எழுதியுள்ள ஈமெயில் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எடிட்டர் அறை

    எடிட்டர் அறை

    மறுநாள் காலையில் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியாகும் புகைப்படங்களில் ஒன்றை தேர்வு செய்வது எடிட்டர் பணி என்பதால் அக்பரிடம், எந்த படங்களை முதல் பக்கத்தில் பிரசுரிக்கலாம் என்பது குறித்து, சில படங்களை காட்டி முடிவை அறிய மஜ்லியே, ஒருநாள் அக்பர் அறைக்கு சென்றாராம்.

    நாக்கை வாயில் செலுத்தினார்

    நாக்கை வாயில் செலுத்தினார்

    அப்போது அக்பர் பார்த்த பார்வையே சரியில்லை என்றும், பிறகு தனது இருக்கைக்கு வந்து, தனது தோள்பட்டையின் கீழே கையை வைத்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்தது, தனது நாக்கை என் எனது வாய்க்குள் செலுத்தினார் என்றும் இமெயிலில் மஜ்லியே தெரிவித்துள்ளார். அப்போது தன்னால் எதையும் செய்ய முடியாமல் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். அன்றுதான் அவர் இன்டன்ஷிப் பயிற்சியின் கடைசி நாளாகும்.

    நம்பிக்கை துரோகம்

    நம்பிக்கை துரோகம்

    1980களில், தனது பெற்றோர் வெளிநாட்டு நிருபர்கள் என்ற, அந்தஸ்தில் பணியாற்றி வந்ததாகவும், அப்போது அக்பருடன், பழக்கம் என்றும் அந்த பழக்கத்தின், மூலம் தன்னை வருடம் பணிக்கு சேர்த்து விட்டதாகவும் தெரிவித்துள்ள மஜ்லியே, எனது நம்பிக்கை மட்டுமின்றி எனது பெற்றோர் நம்பிக்கையையும் அக்பர் கெடுத்துக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்றது 2007 ஆம் ஆண்டு என்பதால், அப்போது அவருக்கு அக்பர் வயது 56 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+