வாய்க்குள் நாக்கை நுழைத்தார்.. மத்திய அமைச்சர் அக்பர் மீது சிஎன்என் பெண் நிருபர் பகீர் குற்றச்சாட்டு
Recommended Video

டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பருக்கு எதிராக பாலியல் புகார்கள் பெருக்கெடுத்து வரும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் பத்திரிக்கையாளரும் இப்போது, அவர் மீது புகார் தெரிவித்துள்ளார்.
சிஎன்என் தொலைக்காட்சியின் பெண் பத்திரிக்கையாளர் மஜ்லியே புவே கம்ப் என்பவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
2007ம் ஆ ண்டு, 18 வயதாக இருக்கும் போது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஏசியன் ஏஜ் என்ற பத்திரிக்கையில் இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருந்தார் மஜ்லியே.

அமெரிக்க பெண்
அந்த காலகட்டத்தில் 'ஏசியன் ஏஜ்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் எம்.ஜே.அக்பர். அப்போதுதான் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஹப்போஸ்ட் இந்தியா என்ற ஊடகத்திற்கு அந்த பெண் பத்திரிக்கையாளர் எழுதியுள்ள ஈமெயில் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் அறை
மறுநாள் காலையில் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியாகும் புகைப்படங்களில் ஒன்றை தேர்வு செய்வது எடிட்டர் பணி என்பதால் அக்பரிடம், எந்த படங்களை முதல் பக்கத்தில் பிரசுரிக்கலாம் என்பது குறித்து, சில படங்களை காட்டி முடிவை அறிய மஜ்லியே, ஒருநாள் அக்பர் அறைக்கு சென்றாராம்.

நாக்கை வாயில் செலுத்தினார்
அப்போது அக்பர் பார்த்த பார்வையே சரியில்லை என்றும், பிறகு தனது இருக்கைக்கு வந்து, தனது தோள்பட்டையின் கீழே கையை வைத்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்தது, தனது நாக்கை என் எனது வாய்க்குள் செலுத்தினார் என்றும் இமெயிலில் மஜ்லியே தெரிவித்துள்ளார். அப்போது தன்னால் எதையும் செய்ய முடியாமல் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். அன்றுதான் அவர் இன்டன்ஷிப் பயிற்சியின் கடைசி நாளாகும்.

நம்பிக்கை துரோகம்
1980களில், தனது பெற்றோர் வெளிநாட்டு நிருபர்கள் என்ற, அந்தஸ்தில் பணியாற்றி வந்ததாகவும், அப்போது அக்பருடன், பழக்கம் என்றும் அந்த பழக்கத்தின், மூலம் தன்னை வருடம் பணிக்கு சேர்த்து விட்டதாகவும் தெரிவித்துள்ள மஜ்லியே, எனது நம்பிக்கை மட்டுமின்றி எனது பெற்றோர் நம்பிக்கையையும் அக்பர் கெடுத்துக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்றது 2007 ஆம் ஆண்டு என்பதால், அப்போது அவருக்கு அக்பர் வயது 56 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications