ஸ்பெஷல் விமானம் அனுப்பியும் சொந்த நாடு போக மறுக்கும் அமெரிக்கர்கள்.. இந்தியாவிலேயே இருக்க விருப்பம்
டெல்லி: இந்தியாவில் சிக்கிக்கொண்டு இருக்கக்கூடிய அமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் பலரும் தங்கள் நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவிக்காமல் இந்தியாவிலேயே இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
அமெரிக்கா, சிறப்பு விமானங்களை அனுப்பி அவர்களை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்தபோதிலும், அவர்கள் இந்தியாவில் இருக்கவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உலகத்திலேயே அமெரிக்காதான், கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பேரை பலி கொடுத்துள்ளது. 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான், இப்பிரச்சினையை சிறப்பாக சமாளித்து வரக்கூடிய இந்தியாவிலேயே இருந்து விடுவதுதான், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு என்ற நினைப்புக்கு அமெரிக்கர்கள் வந்துவிட்டனர்.

பஞ்சாயத்துகள்
மாத்திரையை கொண்டாங்க, அதிவேக சோதனைக் கருவிகளை எங்களுக்கு தான் கொடுக்க வேண்டும், என்பதுபோல ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளை அமெரிக்கா செய்தாலும், அந்த நாட்டினரே, நம்புவதற்கு அவர்கள் நாட்டுக்காரர்கள் தயாராக இல்லை என்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன.

வரலாறுகள்
எந்த தொற்று ஏற்பட்டாலும் அது கட்டாயம் தாராவியை தொட்டுவிட்டுதான் செல்லும்.. அதனாலேயே ஏராளமானோர் இங்கு இறந்து போன வரலாறுகளும் உண்டு. அந்த வகையில் இந்த வைரஸும் தாராவியை பாதித்துள்ளது.. நெரிசல் மிக்க பகுதி என்பதால் சமூக விலகல் கேள்விக்குறிதான்.. கொரோனா பரவ தொடங்கியது என்றதுமே அரசு முதலில் கவனம் செலுத்தியது தாராவியில்தான்.. அதனால்தான் பலி எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

5 பேர் பலி
55 வயதான நபர் ஒருவர்தான் முதல் பலி.. ஆனால் இவருக்கு தொற்று எங்கு, எப்படி, எதன்மூலம் பரவியது என்பது தெரியவில்லை. 5 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிர்பலியை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிரமான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. எனினும் பொதுமக்கள் ஒத்துழைப்பு குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.. போதுமான பயம் இன்னும் வரவில்லை என்கிறார்கள், நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறாம்.. இது சமூக ஆர்வலர்களை கவலை கொள்ள செய்துள்ளது.

தொற்று அபாயம்
இது எல்லாவற்றிற்கும் மேலாக தாராவி பற்றின கவலை என்னவென்றால், இங்கு பொதுக்கழிப்பறை நிறைய பயன்படுத்துவதாக சொல்கிறார்கள்.. கிட்டத்தட்ட 600 பேருக்கு ஒரே பாத்ரூம்தானாம்.. இந்த பொதுக்கழிப்பறை மூலமாகவும் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.. பாத்ரூமில் பக்கெட்கள், கைப்பிடிகள், கதவுகளில் வைரஸ் தொற்று இருக்கும் என்கிறார்கள்.. அதனால் கைகளை சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். லட்சணக்கான மக்கள் வசிக்கும் இப்பகுதியில் வீடு வீடாக சென்று டெஸ்ட்கள் மேற்கொள்ளப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கோரிக்கை
இப்போதைக்கு மெடிக்கல்ஷாப் தவிர மற்ற எல்லா கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எப்படியாவது அங்குள்ள தமிழர்கள் அனைவருமே நலன் பெற வேண்டும் என்றும், அதற்கான சுகாதார, மற்றம் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. எனினும் நெருக்கமான வீடுகள், குறைவான சுகாதாரம், ஏராளமான பாதிப்புகளில் சிக்கி திணறி வருகிறது தாராவி!!
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications