காந்தி வெறுப்பால் தேச தந்தையை கேலி செய்யும் மத்திய அரசு.. 100 நாள் வேலை பெயரை மாற்ற லோக்சபாவில் டிஆர் பாலு எதிர்ப்பு
டெல்லி: MNREGA எனும் மகாத்கா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பெயரை மத்திய அரசு மாற்றம் செய்யும் வகையில் இன்று லோக்சபாவில் மசோதா கொண்டு வந்தது. மகாத்கா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு அந்த திட்டத்துக்கு விக்சித் பாரத் உத்தரவாத வேலைவாய்ப்பு திட்டம் (கிராமம்) (VB-G RAM G) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கான மசோதா இன்று லோக்பசாவில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் திமுக எம்பி டிஆர் பாலு, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி உள்பட எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கிராமத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலை வழங்கும் வகையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அரசு அரசு 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கொண்டு வந்தது. முதலில் வைத்த பெயர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என பெயர் வைக்கப்பட்டது.

அதன்பிறகு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்படி தற்போது கிராமத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் பலனடைந்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுக்கு 100 நாட்கள் இந்த திட்டத்தில் வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வருகின்றனர்.
பஞ்சாயத்து அளவில் குளம், கால்வாய் உள்பட நீர்நிலைகளை ஆழப்படுத்துவது உள்பட, சாலை விரிவாக்க பணிக்கு உதவுவது என வேலைகளை செய்து வுருகின்றனர். இந்த திட்டத்தில் நாடு முழுவதும் 154 மில்லியன் மக்கள் (அதாவது 15.4 கோடி பேர்)பயனடைந்து வருகின்றனர். இதில் 3ல் ஒருவர் பெண்களாக உள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 100 நாட்கள் இந்த திட்டத்தில் வேலையுடன் சம்பளம் கிடைக்கிறது.
இந்நிலையில் தான் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் தான் பெயர் மாற்றம் செய்வதற்கான மசோதாவை மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இன்று லோக்சபாவில் தாக்கல் செய்தார். அதன்படி விக்சித் பாரத் உத்தரவாத வேலைவாய்ப்பு திட்டம் (கிராமம்) (VB-G RAM G) என்று பெயர் மாற்றம் செய்யப்பட உள்ளது.
இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களின் குரலை உயர்த்தி மசோதாவுக்கு எதிராக கோஷமிட்டனர். இருப்பினும் மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் எதிர்ப்பையும் தாண்டி மசோதாவை தாக்கல் செய்தார்.
அதன்பிறகு திமுக எம்பி டிஆர் பாலு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இதுபற்றி இன்று அவர் லோக்சபாவில் விவாதிக்க ஏற்கனவே நோட்டீஸ் வழங்கியிருந்தார். இதனால் மசோதாவுக்கு எதிராக அவர் பேசும்போது, ‛‛மகாத்மா காந்தி மீதான வெறுப்பின் காரணமாக மத்திய அரசு பெயர் மாற்ற மசோதாவை கொண்டு வந்துள்ளது.
தேச தந்தையை மத்திய அரசு கேலி செய்து இருக்கிறது. 100 நாள் வேலை திட்டத்தின் மூலமாக நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றுவதன் என்ன பலன்? இதனால் பெயர் மாற்றத்தை கைவிட வேண்டும்'' என்று கூறினார்.
அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி எம்பி பேசுகையில், ‛‛"மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் ஒரு புரட்சிகரமான மசோதா. அது அறிமுகப்படுத்தப்பட்டபோது அனைத்து அரசியல் கட்சிகளாலும் பாராட்டப்பட்டது. இந்த மசோதா கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்ததுடன், தேவைக்கேற்ப 100 நாட்கள் வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. இந்த சட்டம் வேலைக்கான தேவையின் அடிப்படையில் அமைந்தது.
நிதி ஒதுக்கீடு அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப செய்யப்பட்டது. ஆனால் விபி.-ஜி. ராம் ஜி மசோதா ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீட்டை நிர்ணயிப்பதுடன், மசோதாவின் 60% நிதியை மட்டுமே மத்திய அரசு ஏற்கும். 40 சதவீதத்தை மாநில அரசு ஏற்க வேண்டும் என்கிறது. இது மாநிலங்கள் மீதான நிதிச்சுமையை அதிகரிக்கிறது. இதனால் மசோதாவை திரும்ப பெற்று சிறப்பு குழுவிற்கு அனுப்ப வேண்டும்'' என்றார். அதேபோல் பிற எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசினர். இதையடுத்து லோக்சபா மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications