மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை.. ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி கோரும் வேதாந்தா
டெல்லி: தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் திடீரென மனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.
Recommended Video
தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் அப்பகுதியின் நிலத்தடி நீர், காற்று மாசுபட்டு மக்களின் வாழ்க்கையே நாசமாகிப் போனது. இதற்கு எதிராக அப்பகுதி மக்கள் உக்கிரமான போராட்டத்தை நடத்தினர்.
இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு இழுத்து மூடி சீல் வைத்தது.

தமிழக அரசுக்கு கடிதம்
இதன்பின்னர் இந்த ஆலையை திறக்க பல்வேறு வழிகளிலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் முயற்சித்தது. ஆனால் எதுவும் கை கொடுக்கவில்லை. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தலைமை நிர்வாக அதிகாரி பங்கஜ்குமார் நேற்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆக்சிஜன் உற்பத்தி
அதில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தினசரி 1050 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். கொரோனா நோயாளிகளுக்கு தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. தமிழக அரசுக்கு உதவும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இதேப்போல் மத்திய அரசிடம் இந்த கோரிக்கையை வேதாந்தா நிறுவனம் வைத்திருந்தது.

உச்சநீதிமன்றத்தில் மனு
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் இன்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்க வேண்டும்; அப்படி உற்பத்தி செய்யும் ஆக்சிஜனை தமிழக அரசுக்கு இலவசமாகவே வழங்கவும் தயாராக இருக்கிறோம் என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொல்லைப்புற முயற்சி
தூத்துக்குடியில் 13 அப்பாவி உயிர்கள் பலியாகக் காரணமாக இருந்தது வேதாந்தா குழுமம். எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்பது தமிழகத்தின் பொதுவான வலியுறுத்தல். ஆனால் கொரோனாவை பயன்படுத்தி எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதில் கொல்லைப்புற வழியில் படுதீவிரமாக இறங்கியிருக்கிறது வேதாந்தா நிறுவனம்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications