இந்திய வரலாற்றில் இடம் பிடித்த வேலூர் லோக்சபா தொகுதி.. தமிழகத்திற்கு மற்றொரு அவமானம்
Recommended Video
டெல்லி: சுதந்திர இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பணப்பட்டுவாடா புகாருக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்ட லோக்சபா தொகுதி என்ற பெயரை வேலூர் பெற்றுள்ளது.
கடந்த மார்ச் 30ஆம் தேதி, திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்திலும், அவருக்கு நெருக்கமானவர்கள் இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதில் துரைமுருகன் வீட்டிலிருந்து 10.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. திமுக பிரமுகரான பூஞ்சோலை சீனிவாசன் என்பவரின் சிமெண்ட் குடோனில் இருந்து சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது.

குடியரசு தலைவர்
வேலூர் தொகுதியில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் நிலையில், இவ்வாறு பணம் பறிமுதல் செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஒரு பரிந்துரை அனுப்பப்பட்டது. அதில் பெரும் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதால், வேலூர் லோக்சபா தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

முதல் தொகுதி
இந்த நிலையில்தான் வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று அறிவித்துள்ளார். அந்த வகையில் பணப் பட்டுவாடா புகாருக்காக சுதந்திர இந்தியாவில் தேர்தல் ரத்து செய்யப்படும் முதல் லோக்சபா தொகுதி என்ற பெயரை, அதாவது கெட்ட பெயரை வேலூர் ஈட்டியுள்ளது.

ராஜ்யசபா
இதற்கு முன்பாக 2012ஆம் ஆண்டில் ஜார்க்கண்டில் இரு ராஜ்யசபா தொகுதிக்கான தேர்தல் இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் பணப்பட்டுவாடாவிற்காக, தேர்தல் ரத்து செய்யப்படுவது இதுதான் முதல்முறை, என்பது குறிப்பிடத்தக்கது

சட்டசபை
2017ஆம் ஆண்டில் டிடிவி தினகரன் சென்னை ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட்டபோது பெருமளவில் பணம் விநியோகம் செய்ததாகக் கூறி, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 2016ஆம் ஆண்டில் தமிழக சட்டசபை தேர்தலின்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் அதிமுகவினர் பெருமளவில் பணம் விநியோகம் செய்யப்பட்டதாகக் கருதிய தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதிகளில் தேர்தலை ரத்துசெய்தது. இவ்வாறு பணப்பட்டுவாடாவிற்காக தமிழகத்தில் தேர்தல்கள் ரத்து செய்யப்படுவதால், தேசிய அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர் கிடைத்து வருகிறது.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications