ஆமா வெள்ளையா இருக்கே அது என்னாது? சுரேஷ் கோபியிடம் ஜாலியாக கேட்ட வெங்கய்ய நாயுடு.. அவையில் சிரிப்பலை
டெல்லி: நாடாளுமன்றத்தில் துணை குடியரசுத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு எம்பி சுரேஷ் கோபியிடம் கேட்ட காமெடியான கேள்வி வைரலாகி வருகிறது.
Recommended Video
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மக்களவையில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
அது போல் மாநிலங்களவையிலும் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மாநிலங்களவையில் பாஜகவை சேர்ந்த நியமன எம்பியான சுரேஷ் கோபி நாடாளுமன்றத்தில் பேசினார்.

வெங்கய்ய நாயுடு
அப்போது அவரை பார்த்த வெங்கய்ய நாயுடு காமெடியாக கேட்ட கேள்வியும் அதற்கு சுரேஷ் கோபி கூறிய பதிலும் வைரலாகி வருகிறது. சுரேஷ் கோபி பேச முற்படும் போது "நீங்கள் முகக் கவசம் அணிந்துள்ளீர்களா, அல்லது அது தாடியா என கேட்டுள்ளார். அப்போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபியும் சிரித்துக் கொண்டே சார் இது தாடிதான், என்னுடைய புதிய படத்திற்கான புதிய லுக் என கூறினார். இந்த பதிலால் திருப்தி அடைந்த வெங்கய்ய நாயுடு, சுரேஷ் கோபி தனது பேச்சை தொடருமாறு கூறினார். பின்னர் தனது பேச்சை அவர் தொடர்ந்தார்.

சிரிப்பலை
பொதுவாக வெங்கய்ய நாயுடு இருக்கும் இடத்தில் சிரிப்பு சப்தம் அதிகமாக இருக்கும் என்பார்கள். காரணம் அவர் எப்போது கலகலப்பாக பேசுவார். எதிர்க்கட்சியினர் கோபமாக பேசினாலும் அதை தனது நகைச்சுவை பேச்சால் தணித்துவிடுவார்.

பெட்ரோல் விலை உயர்வு
பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஆகியவற்றால் மக்கள் பாதிப்படைந்துள்ளார்கள். இதை கண்டித்து ஆங்காங்கே போராட்டம், ஸ்டிரைக் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில் விலை உயர்வை கண்டித்து இரு அவைகளிலும் வருங்காலத்தில் எதிர்க்கட்சிகள் புயலை கிளப்பும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications