கதவு மூடிருக்கு.. ரோடு நல்லாருக்கு.. விகாஸ் என்ன முட்டாளா.. வீடியோ போட்டு வெளுத்த போலீஸ் அதிகாரி
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை கான்பூருக்கு கொண்டு வரும் வழியில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த தாதா விகாஸ் துபேவை சுட்டுக் கொன்றதாக உத்தரப்பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்கள் கூறிய காரணங்கள் எதுவும் நம்பும்படி இல்லை. ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஆஸ்தானா பதிவிட்டு இருக்கும் வீடியோவை நீங்களே பாருங்கள்.
கான்பூர் அருகே 8 போலீசாரை சுட்டுக் கொன்று, ஆறு நாட்கள், நான்கு மாநிலங்களில் சுற்றித் திரிந்து தலைமறைவாக இருந்த தாதா விகாஸ் துபே இன்று என்கவுன்டரில் உபி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்குக் காரணமாக போலீசார் கூறியது, உஜ்ஜனியில் இருந்து கான்பூர் அழைத்து வரும் வழியில் தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரின் கார் தடம்புரண்டது. அப்போது தப்பிக்க முயற்சித்த விகாஸ் துபே சுட்டுக் கொல்லப்பட்டார் என்று உபி போலீசார் கூறினர்.

ஆனால், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கார் குறித்த வீடியோவை பதிவு செய்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆஸ்தானா பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி விவாதங்களை எழுப்பியுள்ளது.
அவரும் தனது பதிவில், ''கார் எந்தவித சேதாரமும் இல்லாமல், அனைத்து கதவுகளும் மூடப்பட்டு கிடக்கிறது. சாலையின் கண்டிஷனைப் பார்த்தாலும், கவிழ்வதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. சுற்றிலும் திறந்தவெளி வயல் உள்ளது. ஒரு முட்டாள் கூட இந்த மாதிரியான சூழல் இருக்கும் இடத்தில் தப்பித்து செல்ல முயற்சிக்க மாட்டார்'' என்று பதிவிட்டுள்ளார்.
இவரது ட்வீட்டை பலரும் ரீட்வீட் செய்து இவரது சந்தேகத்தையே அவர்களும் எழுப்பியுள்ளனர். காரில் எந்த சேதாரமும் இல்லை, சாய்த்து வைத்தது போல் இருக்கிறது. முன் பக்க கண்ணாடியில் எந்த சேதாரமும் இல்லை. ஆனால், அந்த நேரத்தில் மழை பெய்து கொண்டு இருந்ததால், காரின் முன்பக்க கண்ணாடியின் வைப்பரை ஆன் செய்து வைத்துள்ளனர். கார் சாய்ந்த பின்னரும் வைப்பர் இயங்கிக் கொண்டு இருக்கிறது. கார் கவிழ்ந்துவிட்டது என்று குறிப்பிடும் உபி போலீசார், குறைந்தது கார் கண்ணாடிகளையாவது உடைத்து இருக்க வேண்டும் அல்லது டயர்கள் கழன்றது போல் காட்டி இருக்க வேண்டும் அல்லது தடுப்பு மீது மோதியது போல் காட்டி இருக்க வேண்டும். கார் தானாக கவிழ்ந்துவிட்டது என்று கூறுவதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை.
OUTRAGEOUS STORY of Vikas Dubey encounter. The vehicle is seen lying "conveniently" on its side, all doors closed. Note the road condition. No reason to overturn "so softly"! Open fields all around! Even a fool with a paunch wud not consider running away in open. pic.twitter.com/8NGT2zx6lT
— Dr. N. C. Asthana, IPS (Retd) (1986-2019) (@NcAsthana) July 10, 2020
அந்தக் காரில்தான் விகாஸ் துபே இருந்தார் என்றால், காரின் கதவுகள் திறக்காமல் எப்படி தப்பித்து இருக்க முடியும். இது மிகப்பெரிய முட்டாள்தனமான செயலாக இருக்கிறது. உடன் சென்ற பத்திரிக்கையாளர்களை சாச்செண்டி பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது, விகாஸ் துபேவை டாடா ஃபார்ச்சுன் காரில் இருந்து மகேந்திரா டியுவி 300 காருக்கு மாற்றி அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பின்னர்தான் விகாஸ் என்கவுன்டர் அரங்கேறியுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications